ஆப்நகரம்

PM kisan: வருமான வரி செலுத்தினால் பணம் கிடைக்குமா?

வருமான வரி செலுத்துவோர் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் நிதியுதவி பெறமுடியுமா?

Samayam Tamil 25 Sep 2021, 9:47 pm
நாட்டிலுள்ள ஏழை எளிய விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற விவசாய நிதியுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று தவணைகளாக 6000 ரூபாய் வழங்கப்படும். ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என, விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கே இந்தப் பணம் அரசு தரப்பிலிருந்து நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதுவரையில் 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் நிறைய பேருக்கு இன்னும் பணம் வரவில்லை என்று கூறப்படுகிறது.
Samayam Tamil pm kisan


பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு சில வரையறைகள் உள்ளன. அனைவருக்கும் கிடைத்துவிடாது. வருமான வரி செலுத்துவோருக்கு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி கிடைக்குமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. பென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!
ஆனால், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்றோர் விண்ணப்பிக்க முடியாது. அதேபோல, மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான பென்சன் வாங்குவோருக்கும் நிதியுதவி கிடைக்காது.

மிக முக்கியமாக முந்தைய ஆண்டில் வருமான வரி செலுத்தியோருக்கு இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்குத் தகுதியில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்