ஆப்நகரம்

Ease of doing business: தமிழகத்தை முன்னேற்ற என்ன செய்ய வேண்டும்?

எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் முன்னேற வேண்டுமானால் இதைச் செய்ய வேண்டும் என்று வணிகர்கள் கூட்டமைப்பு ஆலோசனை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 Sep 2020, 8:57 pm
மாநில அளவில் எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் எவ்வாறு உள்ளன என்பதைக் கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டும் அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டுக்கான பட்டியலை மத்திய அரசு செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிட்டது. அதில் ஆந்திரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டிலும் ஆந்திராதான் முதலிடம். தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல்கள் எளிதாகக் கிடைப்பது, தங்கு தடை இல்லாத முதலீடு தொழில் நடத்துவதில் பிரச்சினைகள் இல்லாமை போன்ற பல்வேறு காரணிகளால் ஆந்திரப் பிரதேசம் முதலிடம் பிடித்தது.
Samayam Tamil ease


உத்தரப் பிரதேசம் 2ஆம் இடத்திலும், தெலங்கானா 3ஆம் இடத்திலும், மத்தியப் பிரதேசம் 4ஆம் இடத்திலும், ஜார்கண்ட் 5ஆம் இடத்திலும், சத்தீஷ்கர் ஆறாம் இடத்திலும், இமாசலப் பிரதேசம் 7ஆம் இடத்திலும், ராஜஸ்தான் 8ஆம் இடத்திலும் இருக்கின்றன. ஆனால் இப்பட்டியலில் தமிழ்நாடு குறிப்பிடும்படியாக எந்த வளர்ச்சியும் காணவில்லை. தமிழகத்துக்கு 14ஆவது இடம் மட்டுமே கிடைத்தது. தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருந்தாலும், அதிக முதலீடுகள் கிடைத்தாலும் தேசிய அளவிலான இந்தப் பட்டியலில் முன்னிலை பெறவில்லை என்பது தமிழக தொழில் துறைக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Forbes: அமெரிக்காவில் கொடி கட்டிப் பறக்கும் இந்தியர்கள்!

இந்நிலையில், எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் முன்னேற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உணவு தானியங்கள் வர்த்தகக் கூட்டமைப்பு ஆலோசனை தெரிவித்துள்ளது. அதன் தலைவர் எஸ்.பி.ஜெயப்பிரகாஷம் பேசுகையில், “தமிழகத்தில் மின்சாரம், தண்ணீர், தொழிலாளர் சக்தி, அமைதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் தொழில் தொடங்குதற்கு ஏதுவாக இருக்கின்றன. ஆனால், ஒப்புதல் வழங்குவதில் தாமதம், உரிமங்கள் கொடுப்பதில் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்கள் பலர் தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களைத் தேடிச் செல்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

தயார் நிலை வீடுகளுக்கு அதிக டிமாண்ட்... கொரோனாவுக்கு நன்றி!

உரிமம் பெறுவது, மின் இணைப்பு பெறுவது, குடிநீர் விநியோகம் போன்றவற்றில் ஆகும் செலவுகள் அதிகமாக இருக்கக்கூடாது எனவும், அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தினால் தமிழகம் முன்னிலை வகுக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உரிமம் பெறுவதில் உள்ள செயல்முறைகளை எளிதாக்கினாலே நல்ல முன்னேற்றம் காணமுடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்