ஆப்நகரம்

திடீரென ஏற்படும் பண நெருக்கடி... சமாளிக்க இது உதவும்!

அவசர காலத்தில் ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க இந்த மூன்று திட்டங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

Samayam Tamil 21 Oct 2021, 5:47 pm
நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் பணம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக வந்து நிற்கும். பலருக்கு வாழ்க்கை முழுவதுமே பணப் பிரச்சினை இருக்கும். எப்போது என்ன நடக்கும் என்றே தெரியாது... இக்கட்டான சமயங்களில் திடீரென்று பணத்தைப் புரட்டவும் முடியாது. இதுபோன்ற சமயங்களில் என்ன செய்வீர்கள்?
Samayam Tamil fund


திடீரென ஏற்படும் பண நெருக்கடியைச் சமாளிக்க மூன்று நிதிகள் உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

1. ஆயுள் காப்பீடு!

இன்று இருப்பவர்கள் நாளை இருப்பார்களா என்று தெரியாது... மரணம் என்பது எப்போதாவது நிகழலாம். அதன் பிறகு குடும்பத்தாரின் நிலை என்னவாகும்? அதற்கு ஆயுள் காப்பீடு அவசியம். ஆயுள் காப்பீடு எடுத்துக் கொண்டால் நாம் இல்லாவிட்டாலும் நமது குடும்பத்தாருக்கு அது பெரிதும் உதவியாக இருக்கும்.

2. சுகாதாரக் காப்பீடு!

ஆயுள் காப்பீட்டைத் தொடர்ந்து சுகாதாரக் காப்பீடு மிகவும் அவசியமான ஒன்றாகும். இதன் மூலம் திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகளைக் கையாள முடியும். வேறு யாரிடமும் பணத்துக்காக நிற்க வேண்டியதில்லை. கொரோனா வந்தபிறகு நிறையப் பேர் சுகாதாரக் காப்பீட்டில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

3. அவசர கால நிதி!

அவசர கால நிதி என்பது எப்போதுமே நம் கையில் இருக்க வேண்டிய ஒன்றாகும். நீங்கள் வீட்டுக் கடனோ, கார் கடனோ அல்லது கிரெடிட் கார்டு கடனோ வாங்கியிருந்தால் அதை அடைக்க வேறு வழியே இல்லை என்ற சூழலில் அவசர கால நிதியை நீங்கள் பயன்படுத்தலாம். மற்ற அவசர செலவுகளுக்கும் இது உதவும். இது இருந்தால் மற்ற முதலீட்டுத் திட்டங்களில் இருக்கும் பணத்தை நீங்கள் எடுக்க வேண்டிய தேவை இருக்காது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்