ஆப்நகரம்

இந்த அக்கவுண்ட் இருந்தா ரூ.20 லட்சம் கிடைக்கும்! அதுவும் இலவசமாக..!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேலரி அக்கவுண்டில் ரூ.20 லட்சம் இலவச சலுகை வழங்கப்படுகிறது.

Samayam Tamil 3 Dec 2021, 5:31 pm
அரசு மற்றும் தனியார் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. அதில் மிக முக்கியமான ஒரு சலுகை விபத்துக் காப்பீடு. சில நிபந்தனைகளுடன் வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை வழங்கப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் விபத்து காப்பீடாக ரூ.20 லட்சம் கிடைக்கும்.
Samayam Tamil pnb


நீங்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக இருந்தால், புதிதாக வங்கிக் கணக்கு தொடங்க விரும்பினால், பஞ்சாப் நேஷனல் வங்கியில் சம்பளக் கணக்கு தொடங்கலாம். இது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்தான். மினிமம் பேலன்ஸ் பிரச்சினை இல்லை. குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாமல்போனால் அபராதம் விதிக்கப்படாது. அதோடு, விபத்துக் காப்பீடு, ஓவர் டிராஃப்ட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் கிடைக்கின்றன.

விபத்து காப்பீடு மட்டுமல்லாமல், ஓவர் டிராஃப்ட் வசதியும் இந்த வங்கிக் கணக்கில் இருக்கிறது. இதில் மொத்தம் நான்கு பிரிவுகள் உள்ளன.

சில்வர் - மாத சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.25,000
கோல்டு - மாத சம்பளம் ரூ.25,001 முதல் ரூ.75,000
பிரீமியம் - மாத சம்பளம் ரூ.75,001 முதல் ரூ.1.50 லட்சம்
பிளாட்டினம் - மாத சம்பளம் ரூ.1.50 லட்சத்துக்கு மேல்

சில்வர் பிரிவில் ஒவர் டிராஃப்டாக ரூ.50,000 வரை எடுத்துக்கொள்ளலாம். கோல்டு பிரிவில் ரூ.1.50 லட்சமும், பிரீமியம் பிரிவில் ரூ.2.25 லட்சமும், பிளாட்டினம் பிரிவில் ரூ.3 லட்சம் வரையிலும் எடுக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்