ஆப்நகரம்

வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி... புதிய வசதி தொடக்கம்!

தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி அறிமுகம் செய்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 8 Apr 2023, 12:51 pm
வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. உங்களுக்கு பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் கணக்கு இருந்தால், உங்களுக்காக ஒரு சிறப்பு வசதி தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்காக பல புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துவதாக அவ்வங்கி அறிவித்துள்ளது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தனிநபர் கடன்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மொபைல் பேங்கிங் ஆகியவை இதில் அடங்கும்.
Samayam Tamil BOM


”வாடிக்கையாளர் அனுபவத்தை எளிதாக்குவதற்கும், வங்கியின் டிஜிட்டல்மயமாக்கலை வலுப்படுத்துவதற்கும், வங்கி பல பகுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் தனிநபர் கடன் சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த பிராந்தியங்களில் புனே பகுதி (புனே மேற்கு, புனே நகரம் மற்றும் புனே கிழக்கு), பெங்களூரு, கொல்கத்தா, பாட்னா மற்றும் சண்டிகர் ஆகியவை அடங்கும்” என்று பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி டிஜிட்டல் முறையில் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி அதன் விசா மற்றும் ரூபே டெபிட் கார்டுகளுக்கு புதிய அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. விசா இன்டர்நேஷனல் டெபிட் கார்டு என்பது புதிய தலைமுறை காண்டாக்ட்லெஸ் கார்டு ஆகும். இது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள சாதனங்களில் வேலை செய்யும். இந்த வசதியைப் பெற கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி சமீபத்தில் கடன் விகிதங்களின் விளிம்பு விலையை (MCLR) 30 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது. எம்சிஎல்ஆர் அதிகரிப்பால், வீட்டுக் கடன், கார் கடனின் ஈஎம்ஐ அதிகரித்துள்ளது. அதன் சுமை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படுகிறது. இதுபோன்ற சூழலில் புதிய சேவைகளை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்