ஆப்நகரம்

நாலு வருசத்துல கோடீஸ்வரர் ஆகலாம்.. இந்த பாலிசி இருந்தா போதும்!

எல்.ஐ.சி.யின் இந்த பாலிசியின் கீழ் நான்கு ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக முடியும்.

Samayam Tamil 7 Jul 2022, 2:13 pm
பொதுமக்களுக்கு நிறைய காப்பீட்டுத் திட்டங்களையும் அதிக வருமானம் தரும் திட்டங்களையும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி.) செயல்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களின் வயது, தேவை போன்ற பிரிவுகளுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்கள் எல்.ஐ.சி.யில் உள்ளன. குறுகிய காலத்தில் பணக்காரர் ஆக நினைப்பவர்களுக்கும் எல்.ஐ.சி. பாலிசி உதவும். அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் எல்.ஐ.சி. ஜீவன் ஷிரோமனி பாலிசி திட்டம்.
Samayam Tamil lic


இதுவொரு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையாக ரூ.1 கோடி கிடைக்கும். பாலிசிதாரர் இத்திட்டத்தின் கீழ் ரிட்டன் பெற நினைக்கும் காலத்துக்கு முன் நான்கு ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருக்க வேண்டும். இந்த பாலிசி 14 ஆண்டுகள், 16 ஆண்டுகள், 18 ஆண்டுகள், 20 ஆண்டுகள் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் முதிர்வடைகிறது.

ரேஷன் கடைகளில் இப்படியொரு வசதி.. தமிழக அரசின் மாஸ்டர் பிளான்!!

இத்திட்டத்தின் கீழ் அதிக லாபம் பெறுவதற்கு பாலிசிதாரர் மாதத்துக்கு 94,000 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். இந்த பாலிசியை வாங்குவதற்கு பாலிசிதாரர் குறைந்தது 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். 14 ஆண்டு பாலிசி காலத்துக்கு அதிகபட்ச வயது வரம்பு 55 ஆண்டுகள். அதேபோல, 16 ஆண்டு பாலிசி காலத்துக்கு 51 வயதாகவும், 18 ஆண்டு பாலிசி காலத்துக்கு 48 வயதாகவும், 20 ஆண்டு பாலிசி காலத்துக்கு 45 வயதாகவும் அதிகபட்ச வயது வரம்பு இருக்க வேண்டும்.

பாலிசிக்கான வயது மற்றும் பாலிசி காலத்தைப் பொறுத்து குறைந்தபட்ச உத்தரவாதத் தொகை மற்றும் பலன்கள் இருக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்