ஆப்நகரம்

பணத்தைக் கொட்டும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!

இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் உங்களுக்கு 7.1 சதவீத வட்டி கிடைக்கிறது.

Samayam Tamil 10 Feb 2022, 6:54 am
பணத்தை முதலீடு செய்ய நிறைய திட்டங்கள் உள்ளன. ஆனால் ரிஸ்க் இல்லாத அதிக லாபம் தரும் திட்டங்களைப் பார்த்து அதில் முதலீடு செய்தால் சிறந்தது. ஆபத்தே இல்லாமல், சிறிய தொகையை முதலீடு செய்து பெரிய அளவில் லாபம் ஈட்ட நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் நல்ல தேர்வாக இருக்கும்.
Samayam Tamil ppf


தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் மிக முக்கியமான திட்டமாகும். இதில் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி லாபம் கிடைக்கிறது. வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், PPF கணக்கில் வரி விலக்கு வழங்கப்படுகிறது.

எந்தவொரு இந்தியக் குடிமகனும் PPF கணக்கைத் திறக்கலாம். மைனர் அல்லது நல்ல மனநிலை இல்லாத நபரின் பெயரில் கணக்கு தொடங்குவதாக இருந்தால் அவரது பாதுகாவலர் கணக்கு தொடங்க முடியும். PPF திட்டத்தில் ஒரு நிதியாண்டில் ரூ.500 முதல் ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம்.

வங்கியில் 1000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது.. அதிரடி உத்தரவு!
கணக்கை மூடுவதாக இருந்தால் அதற்கான படிவத்தை பாஸ்புக்குடன் சேர்த்து சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் ஒப்படைத்து பணத்தை எடுக்கலாம். இத்திட்டம் குறித்த மேலும் விவரங்களுக்கு indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

கொரோனா பிரச்சினை வந்த பிறகு நிறையப் பேருக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சேமிப்புத் திட்டங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இதுபோன்ற போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் பக்க பலமாக இருக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்