ஆப்நகரம்

பண மழை பொழியும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. உங்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

உடனே கணக்கு தொடங்குங்க!

Samayam Tamil 8 Apr 2022, 7:43 am
இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் நீங்கள் போட்டு வைக்கும் பணம் குறுகிய காலத்திலேயே இரு மடங்காகப் பெருகிவிடும்.
Samayam Tamil this post office scheme will double your investment in quick time
பண மழை பொழியும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. உங்களுக்கு சூப்பர் வாய்ப்பு!


எதில் முதலீடு செய்வது?

முதலீடு செய்ய நிறைய இடங்கள் உள்ளன. பங்குச் சந்தையில் கூட முதலீடு செய்யலாம். ஆனால் அதில் ரிஸ்க் அதிகம். ரிஸ்க் எடுக்க விரும்பாமல், பணத்தை இரட்டிப்பாக்க விரும்பும் முதலீட்டாளராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு ஒரு சிறப்புத் திட்டம் உள்ளது. இந்த சிறப்பு திட்டத்தில் டெபாசிட் செய்யும் பணத்தின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. தபால் அலுவலகத்தின் சிறு சேமிப்புத் திட்டமான கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி) உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?

தபால் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில், தனிப்பட்ட முறையில், ஒரு சிறுவரின் பெயரில்கூட முதலீடு செய்யலாம். இரண்டு பெரியவர்கள் சேர்ந்து சேர்ந்து கூட்டுக் கணக்கையும் திறக்கலாம். கிசான் விகாஸ் பத்திரா திட்டத்தில் முதலீடு செய்ய, குறைந்தது 1000 ரூபாயில் தொடங்க வேண்டும். இதில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.

இரட்டிப்பாகும் பணம்!

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் 124 மாதங்களில் இரட்டிப்பாகிவிடும். கிசான் விகாஸ் பத்திரா திட்டத்தில் முதலீடு செய்தால் கூட்டு வட்டி கிடைக்கும். தற்போது, இந்தத் திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு 6.9 சதவீத வட்டி கிடைக்கிறது. கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள எந்த தபால் நிலையத்திலும் கணக்கு தொடங்கலாம்.

கணக்கை மாற்ற முடியும்!

நீங்கள் விரும்பினால், உங்கள் கிசான் விகாஸ் பத்ரா கணக்கை ஒரு தபால் அலுவலக கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றலாம். அதேபோல, இந்தக் கணக்கை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கும் மாற்றலாம். இதில் நாமினி வசதியும் உள்ளது.

எப்போது பணம் கிடைக்கும்?

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் முதிர்வு 30 மாதங்களுக்குப் பிறகு, அதாவது சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பணமாக்கப்படலாம். கிசான் விகாஸ் பத்திராவில் முதலீடு செய்யும் போது வரி விலக்கு சலுகையும் உங்களுக்குக் கிடைக்கும். இதில், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் கணக்கு தொடங்க ஆதார் அட்டை, குடியிருப்புச் சான்று, கேவிபி விண்ணப்பப் படிவம், வயதுச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மொபைல் எண் ஆகியவை தேவைப்படும். கிசான் விகாஸ் பத்ரா அரசாங்கத்தின் சார்பாக தபால் அலுவலகம் மூலம் கிடைக்கிறது. கேவிபி சான்றிதழ்களை பணம், காசோலை அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம் நீங்கள் வாங்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்