ஆப்நகரம்

முதலீடு குறைவு, வருமானம் அதிகம்.. தபால் நிலைய சேமிப்பு திட்டம்!

இந்தத் திட்டத்தில் உங்களுக்கு 7.1 சதவீத வட்டி லாபம் கிடைக்கிறது. நீங்களும் முதலீடு செய்து பல லட்சம் சம்பாதிக்கலாம். முழு விவரம் இதோ..!

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 24 Feb 2023, 10:46 am
மத்திய அரசால் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னணி வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் இந்தத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு திட்டமும் முதிர்வுக் காலம், தகுதி, வைப்பு வரம்புகள் மற்றும் வட்டி விகிதங்கள் போன்ற குறிப்பிட்ட அம்சங்களுடன் வருகிறது. அரசு செயல்படுத்தும் இந்தத் திட்டங்களால் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பயனடைகின்றனர்.
Samayam Tamil post office scheme


சேமிப்பு திட்டங்கள்!


சில சேமிப்புத் திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கானவை. சில பெண்களின் நலனை இலக்காகக் கொண்டவை. விவசாயிகள் மற்றும் சம்பளம் வாங்குபவர்களுக்கும் சிறப்பு திட்டங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு சிறப்புத் திட்டத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம். அதிலிருந்து நீங்கள் நிறையப் பயன் பெறலாம். இதுவொரு தபால் நிலைய சேமிப்பு திட்டமாகும்.

தேசிய சேமிப்பு மாத வருமான திட்டம்!

அரசின் இந்த சேமிப்பு திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தேசிய சேமிப்பு மாதாந்திர வருமானக் கணக்கு திட்டத்தில் இருந்து மக்கள் குறிப்பிட்ட அளவு வட்டி லாபம் பெறலாம். இதில், அதிகபட்சமாக ஒரு கணக்கில் ரூ.9 லட்சமும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சமும் டெபாசிட் செய்யலாம். இந்தக் கணக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது.

அதிகபட்ச தொகை!

ஒரு டெபாசிட்தாரர் இந்தத் திட்டத்தின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை ஒற்றை அல்லது கூட்டுக் கணக்கில் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகைக்கு உட்பட்டு சேமிக்க முடியும். அதே நேரத்தில், இந்த கணக்கை ஒரு வருடம் கழித்து முன்கூட்டியே மூடலாம். இருப்பினும், 3 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டால் 2 சதவீத தொகை கழிக்கப்படும். மூன்று வருடங்கள் முடிந்த பிறகு கணக்கு மூடப்பட்டால் வைப்புத் தொகையில் 1 சதவீத தொகை கழிக்கப்படும். இந்தக் கணக்கில், 2023 ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

சேமிப்பு ஏன் முக்கியம்?

ஒவ்வொரு மாதமும் நாம் வாங்கும் சம்பளம் செலவுகளுக்கே போதுமானதாக இருக்கும். அப்படியே சென்றால் எதிர்காலத்தில் மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்படலாம். திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகள், கல்வி - திருமணம் போன்ற செலவுகளும் பணம் இல்லாமல் போகலாம். அப்போது கடன் வாங்க வேண்ட்ய நெருக்கடி ஏற்படும். அதற்கு பதிலாக கை வசம் சேமிப்புப் பணம் இருந்தால் பெரும் உதவியாக இருக்கும். அதற்கு இப்போதே தாயாராக வேண்டும். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல ஒரு சிறு தொகையை ஒவ்வொரு மாதமும் சேமித்து வைத்தாலே அது சில காலத்திலேயே பல்கிப் பெருகும். அதற்கு இதுபோன்ற சேமிப்புத் திட்டங்கள் உதவியாக இருக்கும்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்