இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினையைத் தொடர்ந்து இந்தியாவில் சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து முதற்கட்டமாக சீனாவைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது இந்தியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் டிக்டாக், ஹலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட செயலிகள் தடை செய்யப்பட்டது அதன் வாடிக்கையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
குறிப்பாக டிக்டாக் செயலிக்கு சர்வதேச அளவில் இருக்கும் ஒட்டுமொத்த பயனாளர்களில் பாதிக்கு மேலான பங்களிப்பை இந்தியா கொண்டுள்ளதோடு, இந்தியாவில் டிக்டாக் செயலியால் பலருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவால் டிக்டாக் நிறுவனத்துக்கு 6 பில்லியன் டாலர் வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் மட்டும் ரூ.44,790 கோடி வரையில் நஷ்டம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்டாக் மட்டுமல்லாமல் டிக்டாக்கின் குளோனாக இயங்கிக் கொண்டிருந்த டிக்டாக் லைட் செயலிக்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈசியாக மொபைலில் PF பணம் எடுப்பது எப்படி?
எப்பாடு பட்டாவது இந்தியாவில் மீண்டும் டிக்டாக் இயங்குவதற்கு அனுமதி வாங்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் முயற்சித்து வருகிறது. முதலில் இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திய அந்நிறுவனம், இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்தது. அதோடு, சீனாவிலிருந்து வெளியேறுவதாகவும், இந்தியப் பயனர்களின் தகவல்களை துஷ்பிரயோகம் செய்ய மாட்டோம் எனவும் உறுதி கூறியது. இந்திய பயனர்களின் தகவல்களை சீனா இதுவரை கேட்டதில்லை எனவும், அவ்வாறு ஒருவேளை சீனா கேட்டாலும் கொடுக்கமாட்டோம் எனவும் மத்திய அரசிடம் டிக்டாக் நிறுவனம் சரணடைந்தது.
வருமான வரித் தாக்கல்: இந்த தப்பை செஞ்சு மாட்டிக்காதிங்க!
ஆனால், தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட 70 வினாக்களுக்கு விடையளிக்கும் படி இந்திய அரசு கேட்டிருந்தது. டிக்டாக் மீதான தடையை நீக்கும் எண்ணத்துக்கும் இந்திய அரசு வரவில்லை. இந்நிலையில், பயனாளர்களின் தகவல் பாதுகாப்புதான் விஷயம் என்றால் அவற்றை இந்தியாவிலேயே நாங்கள் சேமித்துவைக்கத் தயார் என்று டிக்டாக் நிறுவனம் தற்போது கூறியுள்ளது. இந்தியாவிலேயே தேவையான தரவு மையங்களை அமைத்து பயனாளர்களின் தனிநபர் விவரங்களை சேமிப்பதாக டிக்டாக் நிறுவனம் இந்திய அரசிடம் முறையிட்டுள்ளது.
சர்வதேச செயல்பாடுகளுக்கான பொறியியல் மையங்களையும் இந்தியாவில் அமைக்க விரும்புவதாகவும் டிக்டாக் கூறியுள்ளது. இதுகுறித்து இந்திய அரசிடமிருந்து எந்த விளக்கவும் வரவில்லை.
குறிப்பாக டிக்டாக் செயலிக்கு சர்வதேச அளவில் இருக்கும் ஒட்டுமொத்த பயனாளர்களில் பாதிக்கு மேலான பங்களிப்பை இந்தியா கொண்டுள்ளதோடு, இந்தியாவில் டிக்டாக் செயலியால் பலருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவால் டிக்டாக் நிறுவனத்துக்கு 6 பில்லியன் டாலர் வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் மட்டும் ரூ.44,790 கோடி வரையில் நஷ்டம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்டாக் மட்டுமல்லாமல் டிக்டாக்கின் குளோனாக இயங்கிக் கொண்டிருந்த டிக்டாக் லைட் செயலிக்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈசியாக மொபைலில் PF பணம் எடுப்பது எப்படி?
எப்பாடு பட்டாவது இந்தியாவில் மீண்டும் டிக்டாக் இயங்குவதற்கு அனுமதி வாங்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் முயற்சித்து வருகிறது. முதலில் இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திய அந்நிறுவனம், இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்தது. அதோடு, சீனாவிலிருந்து வெளியேறுவதாகவும், இந்தியப் பயனர்களின் தகவல்களை துஷ்பிரயோகம் செய்ய மாட்டோம் எனவும் உறுதி கூறியது. இந்திய பயனர்களின் தகவல்களை சீனா இதுவரை கேட்டதில்லை எனவும், அவ்வாறு ஒருவேளை சீனா கேட்டாலும் கொடுக்கமாட்டோம் எனவும் மத்திய அரசிடம் டிக்டாக் நிறுவனம் சரணடைந்தது.
வருமான வரித் தாக்கல்: இந்த தப்பை செஞ்சு மாட்டிக்காதிங்க!
ஆனால், தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட 70 வினாக்களுக்கு விடையளிக்கும் படி இந்திய அரசு கேட்டிருந்தது. டிக்டாக் மீதான தடையை நீக்கும் எண்ணத்துக்கும் இந்திய அரசு வரவில்லை. இந்நிலையில், பயனாளர்களின் தகவல் பாதுகாப்புதான் விஷயம் என்றால் அவற்றை இந்தியாவிலேயே நாங்கள் சேமித்துவைக்கத் தயார் என்று டிக்டாக் நிறுவனம் தற்போது கூறியுள்ளது. இந்தியாவிலேயே தேவையான தரவு மையங்களை அமைத்து பயனாளர்களின் தனிநபர் விவரங்களை சேமிப்பதாக டிக்டாக் நிறுவனம் இந்திய அரசிடம் முறையிட்டுள்ளது.
சர்வதேச செயல்பாடுகளுக்கான பொறியியல் மையங்களையும் இந்தியாவில் அமைக்க விரும்புவதாகவும் டிக்டாக் கூறியுள்ளது. இதுகுறித்து இந்திய அரசிடமிருந்து எந்த விளக்கவும் வரவில்லை.