ஆப்நகரம்

விவசாயிகளுக்கு மிகப் பெரிய நிம்மதி.. கால அவகாசம் நீட்டிப்பு!

பிஎம் கிசான் திட்டத்தில் சலுகை!

Samayam Tamil 19 Jun 2022, 11:19 am
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் கேஒய்சி சரிபார்ப்பை முடிப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil time extended for farmers to verify kyc update in pm kisan account
விவசாயிகளுக்கு மிகப் பெரிய நிம்மதி.. கால அவகாசம் நீட்டிப்பு!


பிஎம் கிசான் திட்டம்!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டத்தை மத்திய மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. முழுக்க முழுக்க விவசாயிகளுக்கான திட்டம் இது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக இந்தப் பணம் பிரித்து வழங்கப்படுகிறது. இது விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது.

11ஆவது தவணை!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 11 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. மே 31ஆம் தேதிதான் 11ஆவது தவணையை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இதன் மூலம் சுமார் 10 கோடி விவசாயிகள் பயன்பெற்றனர். அடுத்து 12ஆவது தவணைப் பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

முக்கியமான விதிமுறை!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவுசெய்த அனைவருக்குமே நிதியுதவி கிடைத்துவிடாது. சில விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயம். விவசாயிகளின் ஆதார் நம்பர், மொபைல் நம்பர் சரிபார்ப்பு சார்ந்த விதிமுறைதான் இது. இதை முடிக்காவிட்டால் விவசாயிகளுக்கு நிதியுதவி வராது.

கால அவகாசம்!

கேஒய்சி சரிபார்ப்பு வேலையை நிறைய விவசாயிகள் இன்னும் முடிக்காமல் உள்ளனர். அவர்களுக்கு பணம் வருமா வராதா என்ற கவலை இருக்கிறது. இந்நிலையில் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க மத்திய அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. புதிய உத்தரவின்படி ஜூலை 31ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எப்படி முடிப்பது?

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவுசெய்ய நினைக்கும் விவசாயிகளும் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டியவர்களும் https://pmkisan.gov.in/ என்ற வெப்சைட்டில் சென்று முடிக்கலாம். அதேபோல, ஏற்கெனவே விண்ணப்பித்து தவணைக்காக காத்திருக்கும் விவசாயிகளும் நிதியுதவியின் தற்போதைய நிலையை இந்த வெப்சைட்டில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்