ஆப்நகரம்

நகை வியாபாரம் சரிவு.. தமிழக அரசு முதலீடு செய்த நிறுவனத்தின் வருவாய் குறைவு!

நகை விற்பனை சரிவால் மார்ச் காலாண்டில் டைட்டன் நிறுவனத்தின் வருவாய் குறைந்துள்ளது.

Samayam Tamil 6 Apr 2022, 6:24 pm
டைட்டன் (Titan) நிறுவனம் விலையுயர்ந்த வாட்ச், நகைகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டைட்டன் டாடா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
Samayam Tamil titan


இருப்பினும், டைட்டன் நிறுவனத்தில் தமிழக அரசு மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது. டைட்டன் நிறுவனத்தில் தமிழக அரசுக்கு சுமார் 28% பங்கு உள்ளது. இந்நிலையில், டைட்டன் நிறுவனம் தனது ஜனவரி - மார்ச் காலாண்டு வருமான விவரங்களை இன்று வெளியிட்டுள்ளது.

அதில், இடையூறுகள் இருந்தாலும் மார்ச் காலாண்டில் வருமானம் திருப்திகரமாக இருந்துள்ளதாக டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நகை விற்பனை மட்டும் 4% சரிந்துள்ளதாக டைட்டன் தெரிவித்துள்ளது.

EMI, கடன் வட்டி உயருமா? ரிசர்வ் வங்கி கூட்டம் தொடக்கம்!
ஜனவரி மாதம் ஒமைக்ரான் வைரஸ் அலையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் மார்ச் மாதம் பணவீக்கம், ரஷ்யா - உக்ரைன் போர் போன்ற காரணங்களால் தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் நகை விற்பனை பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து டைட்டன், “நகை விற்பனை ஜனவரி மாதம் ஒமைக்ரான் அலையால் குறைந்தது. பின்னர் பிப்ரவரியில் விற்பனை வலுவாக உயர்ந்தது. மார்ச் மாதம் மீண்டும் விற்பனை குறைந்துவிட்டது” என்று தெர்விவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய 8 நகரங்களில் நகை விற்பனை லேசாக உயர்ந்துள்ளது. மற்ற எல்லா பகுதிகளிலும் விற்பனை சரிந்துள்ளது. மறுபுறம், டைட்டன் நிறுவனத்தின் வாட்ச் விற்பனை நல்ல வளர்ச்சியை தொட்டுள்ளது. மார்ச் காலாண்டில் டைட்டன் நிறுவனத்தின் வருவாய் 3% சரிந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்