ஆப்நகரம்

பென்சன் தொகை உயர்வு.. ஓய்வூதியதாரர்களுக்கு 3 சூப்பர் நியூஸ்!

ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் மற்றும் குடும்ப பென்சன் தொகை உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

Samayam Tamil 16 Aug 2022, 2:48 pm
இந்தியாவின் 76ஆவது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், பென்சன் உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
Samayam Tamil MK Stalin


இதன்படி, விடுதலை போராட்ட தியாகிகளுக்கான பென்சன் தொகை 18,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், விடுதலை போராட்ட தியாகிகளுக்கான குடும்ப பென்சன் தொகை 9000 ரூபாயில் இருந்து 10000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இதுபோக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 31%-இல் இருந்து 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கான பென்சன் தொகையும் உயரும்.

இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களும், குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்