ஆப்நகரம்

பழைய ஓய்வூதிய திட்டம்.. நான் எப்போ அப்படி சொன்னேன்? கடுப்பான பிடிஆர்

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான சர்ச்சைக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி.

Samayam Tamil 19 May 2022, 7:32 pm
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது.
Samayam Tamil palanivel thiagarajan


தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என அரசு ஊழியர்கள் காத்திருந்தனர். இதற்கு மத்தியில், சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், முதல்வரின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

இதற்கு மாறாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவின. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் பல்வேறு இடங்களில் போராட்டமும் நடத்தினர். இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி நிதியமைச்சர் பிடிஆர் இன்று விளக்கமளித்துள்ளார்.

இதுக்கே ஷாக்கான எப்படி? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிடிஆர் வரவேற்பு!
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “சட்டமன்றத்தில் நான் என்ன பேசினேன் என்பதையே பார்க்காமல் பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ராஜஸ்தானில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி அடுத்த ஆண்டுக்கு தயாராகி வரும் நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நிதியை அம்மாநில அரசு கேட்டிருக்கிறது.

அப்போது ஒரு புதிய சட்ட சிக்கல் தெரியவந்திருக்கிறது. ராஜஸ்தான் அரசுக்கு பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) அனுப்பியுள்ள கடிதத்தில், தனித்தனி பெயர்களில் இருக்கும் பணத்தை ராஜஸ்தான் அரசு மொத்தமாக கொடுக்கும்படி கேட்பது சட்டத்துக்கு புறம்பானது எனவும், செயல்படுத்த முடியாதது எனவும் தெரிவித்துள்ளது.

இதை நான் சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது எழுந்த கேள்விக்கு விளக்கமாக அளித்தேன். இதில் நிதி பற்றி நான் ஏதாவது பேசியிருக்கிறேனா? நான் எதுவுமே சொல்லாதபோது பல அறிவுஜீவிகள் அறிக்கைகளும், பேட்டியும் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். நான் சொல்லாததை அவர்கள் சொல்லும்போது முழு கனவு அல்லது முழு பொய் என்றுதான் கூற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்