ஆப்நகரம்

சம்பளம் வாங்காத ரகுராம் ராஜன்.. பிடிஆர் சொன்ன ரகசியம்!

முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சம்பளமே வாங்காமல் சேவை செய்வதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Mar 2022, 7:46 pm
கடந்த ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தபின், மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்குவதற்காக முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.
Samayam Tamil palanivel thiagarajan


இக்குழுவில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், இந்திய அரசுக்கான முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், நோபல் பரிசுபெற்ற பொருளாதார வல்லுநர் எஸ்தர் டப்ளோ, இந்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் நாராயணன், பொருளாதார வல்லுநர் ஜீன் ட்ரீஸ் ஆகிய ஐந்து பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதத்தின்போது இன்று முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “நாம் கேட்காமலேயே அவர்கள் நமக்கு ஆலோசனைகள், அறிக்கைகளை வழங்கியுள்ளனர்.

இன்னொரு சம்பவமும் இருக்கு.. பிடிஆரின் பதிலடி!
நேரடியாக துறைகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கியுள்ளனர். முதியோர் பென்சன், இல்லம் தேடி கல்வி திட்டம், சிறு குறு நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதெல்லாம் தாண்டி குழு உறுப்பினர்கள் ஐந்து பேரும் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் சேவை செய்துள்ளனர்.

நம் மக்கள் மேல் உள்ள பாசமும், நாட்டின் மேல் உள்ள பற்றும், தலைவர் மேல் உள்ள மரியாதைக்காகவும் அவர்கள் பணி செய்கிறார்களே தவிர ஒரு ரூபாய் கூட அவர்கள் வாங்குவதில்லை. அவர்களுக்கான போக்குவரத்து செலவுகள், டிக்கெட், கார்களுக்கு கூட பணம் வாங்குவதில்லை. எனவே அவர்கள் உண்மையாகவே நாட்டுக்காக பணிபுரிகின்றனர்” என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்