ஆப்நகரம்

கர்நாடகா டூ தமிழகம்.. தாவும் நிறுவனங்கள்.. ரகசியம் உடைத்த பிடிஆர்

கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வர விரும்பும் நிறுவனங்களை ஈர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Apr 2022, 12:41 pm
கர்நாடகத்தில் இருந்து வெளியேற விரும்பும் நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil PTR


தமிழக அரசு முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது.

அண்மையில் துபாய் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் அங்கு 6100 கோடி ரூபாய் மதிப்பிலான 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தினார். மு.க.ஸ்டாலின் அரசு இதுவரை 68,375.54 கோடி ரூபாய் மதிப்பிலான 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதனால் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்நிலையில், கர்நாடகத்தில் சமூகப் பதற்றம் அதிகரித்து வருவதால் அங்கிருந்து வெளியேற விரும்பும் நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாரகாஜன் தெரிவித்துள்ளார்.

2 லட்சம் பேருக்கு வேலை.. ரூ.68000 கோடி முதலீடு.. அள்ளிப்போட்டு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதுகுறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு உலகம் முழுவதிலும் இருந்து முதலீடுகளை ஈர்த்து வருகிறது. கர்நாடகத்தில் நடக்கும் நிகழ்வுகளை தமிழ்நாடு கவனித்து வருகிறது.

தமிழகத்து வருவதற்கு ஏராளமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இதற்கான போட்டியில் நாம் ஏற்கெனவே இருக்கிறோம். இதுகுறித்து பலரும் தொடர்ந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழக அரசும் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் முதலீடுகள் 53% அதிகரித்துள்ளன. மேற்கொண்டு முதலீட்டாளர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளிடம் இருந்து முதலீடுகளை ஈர்க்க அடுத்த ஆறு மாதங்களில் பல்வேறு நாடுகளில் தமிழக அரசு நிகழ்ச்சிகளை நடத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்