ஆப்நகரம்

எங்க ஊருக்கு வாங்க.. செக் முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு!

தமிழ்நாட்டுக்கு வந்து முதலீடு செய்யும்படி செக் குடியரசு முதலீட்டாளர்களுக்கு MSME அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு.

Samayam Tamil 5 Oct 2022, 2:35 pm
தமிழ்நாடு குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செக் குடியரசு நாட்டில் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.
Samayam Tamil tha mo anbarasan


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டினை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக உருவாக்கிட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் பல்வேறு புதிய சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டில் நடைபெறும் MSV கண்காட்சியில் பங்கு கொள்ள அக்டோபர் 3ஆம் தேதி இரவு செக் குடியரசு நாட்டிற்கு சென்றடைந்தார்.

அக்டோபர் 4ஆம் தேதி அமைச்சர் தா.மோ.அன்பரசனை செக் குடியரசு நாட்டின் தொழில் மற்றும் வணிக துறை அரசு செயலர் மற்றும் உயர் அலுவலர்கள் வரவேற்று தொழில் முதலீடுகள் குறித்தும், சுற்றுப் பயண விவரங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்கள். அதனை தொடர்ந்து அமைச்சர் அன்பரசனும் MSME குழுவினரும் EVEKTOR விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையினையும், கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையினையும் பார்வையிட்டார்கள். இந்த ஆய்வின் போது அமைச்சர் அன்பரசன் அவர்கள் அந்நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். இந்த ஆய்விற்கு பிறகு MSV கண்காட்சி அரங்கிற்கு சென்று அரங்கினை பார்வையிட்டார்கள்.

பண்டிகை, திருமண சீசனில் இப்படியா.. எகிறப்போகும் தங்கம் விலை!
இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண் ராய் இ.ஆ.ப., நிதித்துறை அரசு துணை செயலாளர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப. மற்றும் தமிழக MSME தொழில் துறை குழுவினர், செக் குடியரசு உயர் அலுவலர்கள், செக் குடியரசின் தொழில் முதலீட்டாளர்கள் கலந்துக்கொண்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்