ஆப்நகரம்

அது ரெம்ப கஷ்டமான வேலதான்.... கலங்கும் ரிசர்வ் வங்கி!

இந்த ஆண்டில் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் சவாலான ஒன்றுதான் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Samayam Tamil 27 Apr 2020, 10:32 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரையில் 886 பேர் உயிரிழந்துள்ளனர். 28,380 பேருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் பரவலைத் தடுக்கு 30 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. ஊரடங்கு காலம் நீட்டிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. இந்த நெருக்கடியான கால கட்டத்தில் மக்களின் வாழ்வாதாரமும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை இந்தியா சந்திக்கும் என்று சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
Samayam Tamil அது ரெம்ப கஷ்டமான வேலதான் கலங்கும் ரிசர்வ் வங்கி


அரசின் வரி வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்து வருவதால் நிதிப் பற்றாக்குறையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடப்பு 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையை 3.5 சதவீதமாக வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் தற்போதைய சூழலைப் பார்க்கும் போது இலக்கை அடைவது கடினம் என்று அஞ்சப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் இச்சூழலில், இந்த ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைவது அரசுக்கு சவாலான காரியம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

பிஎஃப் வட்டி குறைப்பு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

இதுகுறித்து சக்திகாந்த தாஸ் பேசுகையில், “கொரோனா பாதிப்புகளைச் சமாளிக்க மத்திய அரசு தொடர்ந்து போராடி வருகிறது. அதேநேரம் நிதிப் பற்றாக்குறை விஷயத்திலும் கவனம் செலுத்துவது அவசியமாகும். இச்சவாலைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நேரடி வரி வருவாய் முடங்கியுள்ளது. பத்திரங்கள் விற்பனை போன்ற நிதி திரட்டுவதற்கான திட்டங்கள் எதுவும் தற்போதைக்கு ரிசர்வ் வங்கியிடம் இல்லை. அதற்கான கட்டாயம் ஏற்படும்போது, அனைத்து தரப்புகளிலும் பார்த்து தேவையான நடவடிக்கைகளில் இறங்குவோம்” என்றார்.

சிறு, குறு நிறுவனங்களுக்கும், வங்கியல்லா நிதி நிறுவனங்கள் துறைக்கும் கடன் வழங்குவதிலும் சவால்கள் இருப்பதாகவும் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்