ஆப்நகரம்

Sensex: வார முதல் நாளில் உயர்வுடன் முடிந்த பங்கு வர்த்தகம்!

முன்னேற்றத்துடன் முடிவடைந்துள்ளது இன்றைய பங்கு வர்த்தக சந்தை.

Samayam Tamil 26 Nov 2018, 4:35 pm
மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு வர்த்தகம் சிறப்பான முன்னேற்றத்துடன் முடிவடைந்துள்ளது.
Samayam Tamil Tamil-image[1]


இன்றைய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 373.06 (1.07%) புள்ளிகள் உயர்வு கண்டு மொத்தம் 35354.08 புள்ளிகளில் உள்ளது. அதே போல் நிஃப்டி 101.85 புள்ளிகள் உயர்ந்து 10,628 புள்ளிகளுடன் நிறைவடைந்துள்ளது.

உயர்வு கண்ட பங்குகள் :
ஹீரோ மோட்டர் பங்குகள் 146.25 வரை உயர்ந்துள்ளது. அதே போல் இந்துஸ்தான் யுனிலிவர், விப்ரோ, ஆசியன் பெய்ண்ட், ஆக்ஸிஸ் பேங், HDFC வங்கி உள்ளிட்டவற்றின் பங்குகள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன.

அதே சமயம் டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், வேதாந்தா, சன் பார்மா உள்ளிட்ட பல பங்குகள் வீழ்ச்சி அடைந்தன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்