ஆப்நகரம்

சுங்க கட்டண ரத்து நவ.24-ம் தேதி வரை நீட்டிப்பு

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நடைமுறையில் உள்ள சுங்க கட்டண ரத்தை, வருகிற 24-ம் தேதி வரை நீட்டித்து சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

TNN 17 Nov 2016, 6:34 pm
புதுதில்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நடைமுறையில் உள்ள சுங்க கட்டண ரத்தை, வருகிற 24-ம் தேதி வரை நீட்டித்து சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil toll plazza fee free times extends to 24th november
சுங்க கட்டண ரத்து நவ.24-ம் தேதி வரை நீட்டிப்பு


கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அதிரடியாக அறிவித்துள்ளது.

மாற்று வழிகளை மத்திய அரசு அறிவித்திருந்தாலும், சில்லறை தட்டுப்பாடு, ஏடிஎம்-களில் போதிய பணம் இல்லாத சூழல், வங்கிகளில் நீண்ட வரிசை, அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு, மருத்துவமனைகள், வரி வசூல் செய்யும்இடங்கள், பெட்ரோல் பங்குகள், மின் கட்டணம் செலுத்தும் இடங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை சில காலம் வரை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இதேபோன்ற நிலைமை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளிலிலும் நீடிப்பதால், சுங்க கட்டணத்தை, சாலை போக்குவரத்து அமைச்சகம், ரத்து செய்து அறிவித்தது. அதன்படி, 18-ம் தேதி (நாளை) நள்ளிரவு 12 மணி வரை சுங்கசாவடிகளில் கட்டணம் செலுத்த தேவையில்லை என சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது.

நாளையுடன் இந்த சுங்கக்கட்டன ரத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவடையும் நிலையில், வருகிற 24-ம் தேதி வரை, கட்டண ரத்தை நீட்டித்து சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வருகிற 24-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சுங்கசாவடிகளில் கட்டணம் செலுத்த தேவையில்லை.
Toll plazza fee free; times extends to 24th November

அடுத்த செய்தி

டிரெண்டிங்