ஆப்நகரம்

ஓபன் செய்த 24 மணிநேரத்தில் கடையை மூடிவிட்டுச் சென்ற..பிரபல அமெரிக்க பொம்மை நிறுவனம்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பொம்மை நிறுவனமான Toys 'R' Us கடை ஹைதராபாத்தில் திறக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் சட்ட சிக்கல்கள் காரணமாக மூடப்பட்டது.

Samayam Tamil 16 Mar 2023, 4:17 pm
அமெரிக்க பொம்மைகள் மற்றும் ஆடை விற்பனையாளரான டாய்ஸ் 'ஆர்' அஸ், Toys 'R' Us மார்ச் 11 அன்று ஹைதராபாத்தில் உள்ள சரத் சிட்டி கேபிடல் மாலில் ஒரு கடையைத் திறந்தது. ஆனால் மால் உரிமையாளருடனான சில சட்ட சிக்கல்களால் இந்தியாவுக்குள் திறக்கப்பட்ட அந்தக் கடையை 24 மணி நேரத்திற்குள் மூடிவிட்டதாக, இந்த விஷயத்தை அறிந்த இரண்டு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
Samayam Tamil Shop closed


இதற்கு முக்கிய காரணமாக ஒரே பொருட்களை விற்கும் இரண்டு விற்பனையாளர்களின் கடை ஒரே இடத்தில் இருக்கக்கூடாது என்ற விதியின் அடிப்படையில் மூடிவிட்டதாக, இந்தியாவில் உள்ள அதன் ஆப்பரேட்டர்கள் மற்றும் மால் உரிமையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவொன்றும் புதிதல்ல, நன்கு விவரம் தெரிந்தவர்கள் ஒரே கடை அல்லது வணிக வளாகத்தில் பெப்சி மற்றும் கோக்க கோலாவை ஒன்றாக விற்பனை செய்ய மாட்டார்கள், சில இடங்களில் மட்டுமே இரண்டு பிராண்டின் பொருட்களும் விற்கப்படும். அதேபோலத்தான் Toys 'R' Us பிராண்டிற்கும் நடந்துள்ளது.

Toys 'R' Us நிறுவனத்தின் போட்டியாளர் நிறுவனம் அந்த மாலில் ஏற்கனவே கடையை வைத்திருந்ததால், திறந்த ஒரே நாளில் மூடப்பட்டதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

அபுதாபியை தளமாகக் கொண்ட லுலு குரூப் இன்டர்நேஷனலின் ஒரு பிரிவான டேபிள்ஸ் இந்தியாவுடன் பிரத்யேக மாஸ்டர் ஃபிரான்சைஸ் ஒப்பந்தத்திற்காக 2017 இல் இணைந்தபோது, பொம்மை விற்பனையாளர் நிறுவனமான Toys 'R' Us இந்தியாவில் தோல்வியுற்றது.

அக்டோபர் 2017 இல் 200-க்கும் மேற்பட்ட கடைகளைத் திறக்கும் திட்டத்துடன் உலகளாவிய பொம்மை பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனால், 14 கடைகளை மட்டுமே திறக்க முடிந்தது, ஆனால் அக்கடைகளும் செயல்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் மூடப்பட்டன.


அடுத்த செய்தி

டிரெண்டிங்