ஆப்நகரம்

SMS போகல! ஏர்டெல், வோடஃபோன், ஜியோ நிறுவனங்களுக்கு உத்தரவு!

மொபைல் நம்பர் போர்டபிலிட்டி விவகாரத்தில் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Dec 2021, 11:16 am
இந்திய நெட்வொர்க் சந்தையில் தற்போது கடுமையான போட்டி நிலவி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவுடன் மல்லுக் கட்டும் ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்ப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. அதேநேரம், வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக சமீபத்தில்தான் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. மூன்று நிறுவனங்களுமே போட்டி போட்டுக் கொண்டு கட்டணங்களை உயர்த்தின.
Samayam Tamil TRAI


இது ஒருபுறம் இருக்க, வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக மொபைல் நம்பர் போர்டபிலிட்டி (MNP) விவகாரத்தில் நெட்வொர்க் நிறுவனங்கள் கடுமையாக நடந்துகொள்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதாவது ஒரு மொபைல் நெட்வொர்க்கிலிருந்து இன்னொரு நெட்வொர்க் சேவைக்கு மாறுவதற்கு மொபைல் நம்பரிலிருந்து 1900 என்ற நம்பருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். ஆனால் வாடிக்கையாளர்களால் எஸ்.எம்.எஸ். அனுப்ப முடிவதில்லை. இலவச எஸ்.எம்.எஸ். இருந்தும் அனுப்ப முடியவில்லை என்று பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பொதுவாக இதுபோன்ற சேவை எஸ்.எம்.எஸ்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஆனால் இவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதோடு வாடிக்கையாளர்கள் அனுப்ப முடியாத சிக்கலும் உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்புக்கு வந்த புகார்களை அடுத்து, நெட்வொர்க் நிறுவனங்களுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

நகை வாங்க சூப்பர் சான்ஸ்... மிஸ் பண்ணிடாதீங்க!

மொபைல் நம்பர் போர்டபிலிட்டி விஷயத்தில் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் சேவை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா, ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் டிராய் அறிவித்துள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள மொபைல் ரீசார்ஜ் பிளான்களில் எஸ்.எம்.எஸ் சேவைகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதற்காக தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டியதாக உள்ளது. இந்நிலையில், டிராய் உத்தரவால் வாடிக்கையாளர்கள் இனி எளிதாக மொபைல் நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ள முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்