ஆப்நகரம்

SEBI கமிட்டியில் அதானியின் சம்பந்தி.. பாயிண்ட்டை பிடித்த மஹுவா மொய்த்ரா

செபி கமிட்டியில் கவுதம் அதானியின் சம்பந்தி இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா குற்றச்சாட்டு.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 3 Feb 2023, 12:04 pm
அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதானி பங்குகள் தவறாக கையாளப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கவை சேர்ந்த ஹிண்டென்பர்க் (Hindenburg Research) நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil adani - mahua moitra
adano - mahua moitra


இதைத்தொடர்ந்து, அதானி குழுமம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதானி நிறுவனங்களின் பங்குகள் மிக மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. குறிப்பாக, ஹிண்டென்பர்க் அறிக்கை வெளியான பின் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு இதுவரை 70% சரிந்துள்ளது. இன்று மட்டுமே அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 35% சரிந்துள்ளது.

அதானி குழுமத்தை சேர்ந்த மற்ற பங்குகளும் சரிந்து வருகின்றன. இதுமட்டுமல்லாமல், சர்வதேச சந்தையில் அதானி கடன் பத்திரங்களும் நெருக்கடியில் இருக்கின்றன. அதானி பத்திரங்களின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ள சூழலில், இனி அதானி பத்திரங்களை பிணையாக ஏற்க முடியாது என சிட்டிகுரூப், கிரெடிட் சூயிஸ் போன்ற சர்வதேச வங்கிகள் தெரிவித்துள்ளன.

Adani share: ரத்த வெள்ளத்தில் அதானி பங்கு.. தாறுமாறான நஷ்டத்தில் பங்குதாரர்கள்!
இதுமட்டுமல்லாமல், அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகள் குறித்து செபி விசாரணை நடத்தி வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. மறுபுறம், அதானி விவகாரத்தில் செபி அமைதி காப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த சூழலில், செபி கமிட்டியில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சம்பந்தி இடம்பெற்றுள்ளதாகவும், அதனால் செபி சுதந்திரமாக விசாரணை நடத்த முடியாது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா ட்விட்டரில், “பிரபல வழக்கறிஞர் சிரில் ஷ்ராஃப் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. ஆனால் அவரது மகள், கவுதம் அதானியின் மகனை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

தற்போது செபியின் Corporate Governance & Insider Trading கமிட்டியில் சிரில் ஷ்ராஃப் இடம்பெற்றுள்ளார். அதானி விவகாரத்தை செபி விசாரணை செய்தால், சிரில் ஷ்ராஃப் தாமாகவே விலகிக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்