ஆப்நகரம்

ஏடிஎம்மில் பணம் எடுத்தால் இவ்வளவு செலவாகுமா? வெளியான பகீர் தகவல்!

நான்கு முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் 173 ரூபாய் பிடிக்கப்படும் என்பது உண்மையா?

Samayam Tamil 7 Oct 2022, 1:13 pm
நம் அனைவரிடமுமே வங்கிக் கணக்கு இருக்கும். பலரிடம் நிறைய வங்கிக் கணக்குகள் கூட இருக்கலாம். வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஏடிஎம் கார்டு வைத்திருப்போம். ஏடிஎம்களில் தேவைப்படும்போது பணம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஒரு மாதத்தில் இத்தனை முறைதான் இலவசமாகப் பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.
Samayam Tamil atm


பொதுவாகவே நான்கு முறைக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் பரிவர்த்தனை ஒன்றுக்கு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஏடிஎம் பரிவர்த்தனை தொடர்பான செய்தி ஒன்று தற்போது வைரலாகப் பரவியுள்ளது. அந்த செய்தியில் 5 முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் 173 ரூபாய் பிடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கில் காணாமல் போகும் பணம்.. வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!
PIB சார்பாக மேற்கொள்ளப்பட்ட உண்மை சரிபார்ப்பு சோதனையில் இது போலியான செய்தி என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல, வங்கி ஏடிஎம்களில் 5 முறை வரை இலவசமாகப் பணம் எடுக்கலாம் எனவும், அதைத் தாண்டினால் பரிவர்த்தனை ஒன்றுக்கு அதிகபட்சமாக 21 ரூபாய் வரை மட்டுமே பிடிக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற போலியான செய்திகள் அதிகமாகப் பகிரப்பட்டு வருவதாகவும், வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்