ஆப்நகரம்

ட்விட்டர் டீலை முடித்த எலான் மஸ்க்.. பராக் அகர்வாலுக்கு 322 கோடி ரூபாய் செட்டில்மெண்ட்!

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் பராக் அகர்வாலுக்கு 322 கோடி ரூபாய் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 26 Apr 2022, 1:23 pm
பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை வாங்குவதற்கு டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் கடந்த சில வாரங்களாக முயற்சித்து வருகிறார். 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க விரும்புவதாக எலான் மஸ்க் முதலில் தெரிவித்தார்.
Samayam Tamil Elon Musk - parag agrawal


இந்த டீல் குறித்து எலான் மஸ்க் மற்றும் ட்விட்டர் நிர்வாகம் இடையே தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவது முடிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இதன்படி, 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குகிறார். ட்விட்டர் நிறுவனத்தை தான் விலைக்கு வாங்குவதை பற்றி எலான் மஸ்க் சூசகமாக சிக்னல் கொடுத்துள்ளார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தற்போதைய அதிகாரியான பராக் அகர்வால் எதிர்காலம் என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ட்விட்டரை வாங்கும் எலான் மஸ்க்.. முடிவுக்கு வந்த டீல்!
இந்திய வம்சாவளியை சேர்ந்த பராக் அகர்வால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பதவியேற்றார். அதற்கு முன் ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக அகர்வால் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினால் தலைமை பதவியில் பராக் அகர்வால் நீடிப்பாரா அல்லது நீக்கப்படுவாரா என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. தலைமை அதிகாரியாக பதவியேற்று 12 மாதங்களில் அவர் நீக்கப்பட்டால் அவருக்கு 42 மில்லியன் டாலர் வழங்கப்பட வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

42 மில்லியன் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 322 கோடி ரூபாய். எனவே, பராக் அகர்வால் ட்விட்டர் தலைமை பதவியில் நீடிப்பாரா என்பதே தற்போது ஹாட் விவாதமாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்