ஆப்நகரம்

Elon Musk: சிக்கலில் எலான் மஸ்க்.. ஆயுதத்தை எடுத்த ட்விட்டர்!

எலான் மஸ்க்கிற்கு எதிராக வழக்கு தொடர ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 11 Jul 2022, 11:47 am
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்க முயற்சித்து வந்தார். இதற்காக முதலில் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2% பங்குகளை வாங்கினார்.
Samayam Tamil elon musk


இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக எலான் மஸ்க் மாறினார். இதையடுத்து அவருக்கு ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தனக்கு ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இடம் வேண்டாம் என மறுத்துவிட்டார் எலான் மஸ்க்.

இதையடுத்து, மொத்த ட்விட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்குவதற்கு எலான் மஸ்க் முயற்சித்தார். இதற்கான ஒப்பந்தமும் தயார் செய்யப்பட்டு இறுதிநிலையை எட்டியது. பின்னர், ட்விட்டர் சமூக வலைதளத்தில் உள்ள போலி கணக்குகள் குறித்து தகவல் கொடுத்தால் மட்டுமே ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

எலான் மஸ்க் பத்தி பேசாதிங்க.. ஊழியர்களுக்கு வாய் பூட்டு போட்ட ட்விட்டர்!
இதனால் ட்விட்டரை விலைக்கு வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், போலி கணக்குகள் பற்றி தகவல் கொடுக்கப்படாததால் ட்விட்டர் ஒப்பந்தம் கைவிடப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று எலான் மஸ்க் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில், 44 பில்லியன் டாலர் மதிப்புள்ள ட்விட்டர் ஒப்பந்தத்தை கைவிட்டதால் எலான் மஸ்க்கிற்கு எதிராக வழக்கு தொடர ட்விட்டர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வாச்டெல், லிப்டன், ரோசென், கட்ஸ் ஆகிய சட்ட நிறுவனங்களுடன் ட்விட்டர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்