ஆப்நகரம்

இந்தியர்களுக்கு வேலை கொடுக்கும் உபேர்!

இந்தியாவில் 140 பொறியாளர்களுக்கு வேலை கொடுப்பதாக உபேர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 5 Aug 2020, 6:06 pm
அமெரிக்காவின் மிகப் பெரிய டாக்ஸி போக்குவரத்து சேவை நிறுவனமான உபேர், இந்தியாவிலும் சேவை வழங்கி வருகிறது. இந்தியாவின் ஓலா நிறுவனத்துக்குப் போட்டியாக தனது தொழிலை விரிவுபடுத்திவரும் உபேர், இதற்காகத் தொடர்ந்து முதலீடும் செய்து வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கால் டாக்ஸி போக்குவரத்து சேவையில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் நடவடிக்கையில் உபேர் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தனது தொழில்நுட்பப் பிரிவில் ஆள் பலத்தை அதிகரிக்க முடிவுசெய்துள்ளது.
Samayam Tamil uber job


பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மொத்தம் 140 பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களை உபேர் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவில் இணைக்க உபேர் முடிவுசெய்துள்ளது. இந்தியாவில் டாக்ஸி போக்குவரத்துச் சேவையை விரிவுபடுத்துவது, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவது என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக உபேர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் தனது நிதித் தொழில்நுட்பச் சேவையைப் பலப்படுத்த ஜெயராம் வல்லியூர் என்பவரை உபேர் நிறுவனம் சமீபத்தில் மூத்த இயக்குநராக நியமித்தது.

ஓலா: கொரோனா தொல்லை இனி இல்லை!

உபேரில் இணைவதற்கு முன்பாக இவர் 14 ஆண்டுகள் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தற்போதைய கொரோனா சமயத்தில் டாக்ஸி போக்குவரத்து சேவைகள் பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் நிலையில், பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்கவும், டிஜிட்டல் சார்ந்த பரிவர்த்தனைகளை அதிகமாக ஊக்குவிக்கவும் உபேர் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இக்குழுவில்தான் புதிய பொறியாளர்கள் இந்தியாவிலிருந்து நியமிக்கப்படவுள்ளனர். டாக்ஸி ஓட்டுநர்களின் பாதுகாப்பு கருதி மாஸ்க், சானிடைசர் போன்ற ஏற்பாடுகளையும் உபேர் நிறுவனம் செய்துள்ளது.

கொரோனாவைத் தொடர்ந்து டாக்ஸி சேவையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியிலிருந்து மீண்டு வளர்ச்சிக்குத் திரும்பும் முனைப்பில் உபேர் செயல்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்