ஆப்நகரம்

டாக்ஸி கட்டணம் உயர்வு.. ஊபர் அதிரடி அறிவிப்பு!

பயணிகளுக்கான டாக்ஸி கட்டணங்களை உயர்த்துவதாக ஊபர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 20 May 2022, 3:07 pm
இந்தியாவில் இப்போது பெட்ரோல் - டீசல் விலை உச்சத்தில் உள்ளது. அனைத்து நகரங்களிலும் இவற்றின் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பலர் மீண்டும் பேருந்து, ரயில்களில் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். நிறையப் பேர் டாக்ஸி போக்குவரத்து சேவை பக்கம் திரும்பியுள்ளனர். ஆனால் அங்கும் இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil uber


பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தைச் சமாளிக்க முடியாமல் போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சுமை அதிகரித்துள்ளது. பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தால் டாக்ஸி ஓட்டுநர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கட்டணத்தை உயர்த்துவதாக ஊபர் நிறுவனத்தின் மத்திய செயல்பாட்டு இயக்குநரான நிதிஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, உபேர், ஓலா நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டாக்ஸி கட்டணங்களை உயர்த்தியது, பயணங்களை கேன்சல் செய்வது போன்ற விவகாரங்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தை சமாளிக்க கட்டணத்தை உயர்த்தினால் வாடிக்கையாளர்கள் அதிக இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது.

ஊபர் டாக்ஸி கட்டணம் உயர்வு.. பொதுமக்களுக்கு அடுத்த ஷாக்!
இந்தியாவில் ஓலா, ஊபர் நிறுவனங்கள்தான் டாக்ஸி சேவையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஊபர் நிறுவனம் இந்தியாவின் ஓலா நிறுவனத்துக்கு கடும் போட்டியை வழங்கி வருகிறது. ஒரு நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினாலே மற்றொரு நிறுவனமும் கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதற்கிடையில் வாடிக்கையாளர்கள்தான் சிக்கித் தவிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்