ஆப்நகரம்

ஊபர் டாக்ஸி கட்டணம் உயர்வு.. பொதுமக்களுக்கு அடுத்த ஷாக்!

டாக்ஸி கட்டணத்தை 12 சதவீதம் உயர்த்துவதாக ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 12 Apr 2022, 7:43 am
பேருந்துகளிலும் ரயில்களிலும் கூட்ட நெரிசலில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களும் மிக வேகமாக ஒரு இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களும் டாக்ஸிகளில் அதிகமாகப் பயணிக்கின்றனர். மற்ற ஆட்டோக்களை விட ஓலா, ஊபர் போன்ற டாக்ஸிகளில் கட்டணம் குறைவு என்பதால் இவற்றை நிறையப் பேர் தேர்ந்தெடுக்கின்றனர்.
Samayam Tamil uber


இதனாலேயே இந்தியாவில் டாக்ஸி போக்குவரத்து சேவைகள் கடந்த சில ஆண்டுகளாகவே மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்தியாவின் ஓலா டாக்ஸி நிறுவனத்துக்குப் போட்டியாக, அமெரிக்காவின் ஊபர் டாக்ஸி நிறுவனமும் இந்தியாவில் சிறப்பான முறையில் சேவை வழங்கி வருகிறது. இவ்விரண்டு நிறுவனங்களுக்கும் எப்போதுமே கடுமையான போட்டி இருக்கும்.

போட்டி இருப்பதால் டாக்ஸி போக்குவரத்து கட்டணங்களும் ஒப்பீட்டளவில் இருக்கும். ஒரு நிறுவனம் விலையைக் குறைத்தாலோ அல்லது உயர்த்தினாலோ அது மற்ற நிறுவனத்தைப் பாதிக்கும். எனவே டாக்ஸி போக்குவரத்து கட்டணங்கள் இவ்விரு நிறுவனங்களிடையே முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதுபோன்ற சூழலில், டாக்ஸி போக்குவரத்து கட்டணத்தை அதிரடியாக 12 சதவீதம் வரையில் உயர்த்துவதாக ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால்தான் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியே இருக்கும் பெட்ரோல் விலை.. வாகன ஓட்டிகள் நிம்மதி!
இந்த விலை உயர்வு முதற்கட்டமாக டெல்லியில் அமலுக்கு வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் டாக்ஸி போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல, ஓலா டாக்ஸி நிறுவனமும் விரைவில் தனது போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்