ஆப்நகரம்

பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் கார்டு.. விதிமுறைகள் தளர்வு!

பாலியல் தொழிலாளிகளுக்கு ஆதார் வழங்க ஒரு சான்றிதழ் மட்டும் போதும் என உச்ச நீதிமன்றத்திடம் அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 2 Mar 2022, 5:52 pm
பாலியல் தொழிலாளிகளுக்கு ஆதார் வழங்குவது தொடர்பாக 2011ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு பிப்ரவரி 28ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
Samayam Tamil sex workers


அப்போது, பாலியல் தொழிலாளிகளிடம் சரியான சாறிதழ் இருந்தால் அவர்களுக்கும் ஆதார் கார்டு வழங்கப்படும் என ஆதார் ஆணையம் (UIDAI) தெரிவித்தது. இதன்படி, மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் வழங்கிய சான்று இருந்தாலே பாலியல் தொழிலாளிகளுக்கு போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலாளிகளுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (National AIDS Control Organisation) வழங்கிய சான்றிதழ் இருந்தாலே ஆதார் கார்டு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத்திடம் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு ஆதார் கார்டு.. எப்படி அப்ளை பண்ணனும்?
பாலியல் தொழிலாளிகளிடம் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் சான்றிதழ் இருந்தால் இருப்பிடச் சான்று உள்ளிட்ட எந்தவொரு ஆவணமும் ஆதார் பெறுவதற்கு தேவையில்லை என ஆதார் ஆணையம் உச்ச நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆதார் கார்டு என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்நிலையில், பாலியல் தொழிலாளிகளுக்கும் ஒரே சான்றிதழ் மூலம் ஆதார் கார்டு வழங்கப்படும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்