ஆப்நகரம்

ரூ. 91 லட்சம் வருமானம்.. சமயபுரம் கோவில் உண்டியலில் காணிக்கை!

திருச்சி சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ.91 லட்சத்துக்கு மேல் உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 31 Mar 2023, 4:00 pm
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் கடந்த 6 நாட்களில் ரூ. 91 லட்சத்து 39 ஆயிரத்து 809 ரூபாய் ரொக்கம், 1 கிலோ 220 கிராம் தங்கம், 2 கிலோ 790 கிராம் வெள்ளி பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியலில் கிடைத்துள்ளது.
Samayam Tamil undiyal


திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் எண்ணினார்.

அப்போது பக்தர்கள் கோயில் உண்டியலில் கடந்த 6 நாட்களில் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ. 91 லட்சத்து 39 ஆயிரம் 809 ரூபாய் ரொக்கம் கிடைத்துள்ளது. அதேபோல,1 கிலோ 220 கிராம் தங்கமும், 2 கிலோ 790 கிராம் வெள்ளியும், 222 அயல்நாட்டு கரன்சி நோட்டுகளும் 1128 அயல் நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றதாக கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளர்.

இதேபோல, சில நாட்களுக்கு முன்னர் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் கடந்த மாதம் பக்தர்களால் அளிக்கப்பட்ட காணிக்கை உண்டியல் எண்ணப்பட்டது. துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற எண்ணும் பணியில், ஒரு கோடியே 74 லட்சத்து 87 ஆயிரத்து 154 ரொக்கப் பணம், தங்கம் 34 கிராம் 200 மில்லி கிராம், வெள்ளி 3 கிலோ 550 கிராம் காணிக்கையாக கிடைத்தது.

உண்டியல் எண்ணும் பணியில் உதவி ஆணையர்கள் பாஸ்கரன், ராமநாதபுரம் உதவி ஆணையர் ஞானசேகரன், துணைப் பொறியாளர் ராமமூர்த்தி, ஆய்வர் பிரபாகரன், பேஷ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, கோயில் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், மேலாளர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், அலுவலகப் பணி அண்ணாதுரை மற்றும் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு எடப்பாடி உழவாரப்பணி ஆன்மீக குழுவினர்கள் ஈடுபட்டனர்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்