ஆப்நகரம்

ESIC: வேலை போனவர்களுக்கு ஜூன் வரை சம்பளம்!

கொரோனாவால் வேலையை இழந்தவர்களுக்கான சலுகை 2021 ஜூன் மாதம் வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Oct 2020, 5:24 pm
கொரோனா பாதிப்பால் மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில் துறை முற்றிலும் முடங்கியது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டது. வருவாய் இல்லாமல் போனதால் நிறுவனங்கள் பல தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தன. சில நிறுவனங்கள் சம்பளத்தையும் புதிய வேலைவாய்ப்புகளையும் குறைத்தன. இதுபோன்ற சூழலில், கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு 50 சதவீத சம்பளம் வழங்கப்படும் என்ற சலுகையை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
Samayam Tamil salary


ஈஎஸ்ஐசி (ESIC - Employees State Insurance Corporation) அமைப்பின் உறுப்பினர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும். அடல் பிமித் வியக்தி கல்யான் யோஜனா என்னும் இத்திட்டம் 2018 ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இத்திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, மார்ச் 24 முதல் இந்த ஆண்டின் டிசம்பர் 31 வரையில் வேலையை இழந்த அல்லது வேலையை இழக்கும் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னை காய்கறி விலை: இன்னைக்கு காயா, பழமா?

இந்த அறிவிப்பின் மூலம் கிட்டத்தட்ட 40 லட்சம் தொழில் துறை ஊழியர்கள் பயன்பெறுவார்கள் எனவும், தேவைப்பட்டால் இத்திட்டத்தை மேலும் நீட்டிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில், 2021 ஜூன் மாதம் வரையில் இந்த அடல் பிமித் வியக்தி கல்யான் யோஜனா திட்டம் நீட்டிக்கப்படுவதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இருந்த விதிமுறையின் படி வேலையை இழந்தவர்களுக்கு 25 சதவீத சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த அளவு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

பிஎஃப் பேலன்ஸ் பார்ப்பது எப்படி?

அதேபோல, இதற்கு முன்னர் இருந்த நடைமுறையின்படி, வேலையை இழந்த 90 நாட்கள் கழித்தே ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். ஆனால் இப்போது அக்கால அளவு 30 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இச்சலுகையைப் பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள் ESIC அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். ஆதார், வங்கிக் கணக்கு உள்ளிட்ட ஆவணங்கள் கேட்கப்படும். அதேபோல இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் நபர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளாவது இருந்திருக்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்