ஆப்நகரம்

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்.. இப்போ பரவால!

இந்தியாவின் வேலையின்மை விகிதம் தற்போது குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 23 Jun 2022, 12:14 pm
வேலையில்லா திண்டாட்டம் என்பது இந்தியாவில் நீண்ட காலமாகவே இருந்து வரும் பிரச்சினையாகும். அரசு தரப்பிலிருந்து வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வந்தாலும் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் இல்லை. அதுவும் கொரோனா பிரச்சினை வந்த பிறகு நிறையப் பேருக்கு வேலை இல்லாமல் போனது. புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்கவில்லை. எனினும் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதாக அரசு தரப்பு அறிக்கை கூறுகிறது.
Samayam Tamil job


இந்தியாவின் வேலையின்மை விகிதம் குறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் மாதங்களில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் வேலையின்மை விகிதம் 9.3 சதவீதமாக இருந்தது. கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளால் அப்போது நிறையப் பேர் வேலை இல்லாமல் இருந்தனர். 15வயதுக்கு மேற்பட்ட மக்களின் அடிப்படையில் வேலையின்மை விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுக்கு மிகப் பெரிய ஆபத்து.. ஒரு வாரம்தான் டைம்!

முன்னதாக 2021 அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் நகர்ப்புறங்களில் 8.7 சதவீதமாக இருந்தது. 2022 ஜனவரி - மார்ச் காலாண்டில் பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 10.1 சதவீதமாக இருந்தது. 2021 ஜனவரி - மார்ச் காலாண்டில் இது 10.5 சதவீதமாகப் பதிவானது. ஆண்களைப் பொறுத்தவரையில், 2021 ஜனவரி - மார்ச் காலாண்டில் 8.6 சதவீதத்திலிருந்து 2022 ஜனவரி - மார்ச் காலாண்டில் 7.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல, 2021 அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் ஆண்களுக்கான வேலையின்மை விகிதம் 8.3 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்