ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. இனி எவ்வளவு அகவிலைப்படி கிடைக்கும்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இனி எவ்வளவு அகவிலைப்படி கிடைக்கும்?

Samayam Tamil 29 Sep 2022, 2:51 pm
பண்டிகைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
Samayam Tamil govt employees


இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 38% ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சத்துக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு உயரும்? சம்பள உயர்வை கணக்கிடுவது எப்படி என்பதை பார்க்கலாம். அடிப்படை ஊதியம்/ஓய்வூதியம் தொகையில் 38% கணக்கிட்டால் உங்களுக்கான அகவிலைப்படி எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ளலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. ஓய்வூதியதாரர்களுக்கும் ஹேப்பி நியூஸ்!
அடிப்படை ஊதியம்/ஓய்வூதியம் 25000 ரூபாய் என வைத்துக்கொண்டால், 38% விகிதத்தில் 8,500 ரூபாய் அகவிலைப்படி வழங்கப்படும். அதாவது அகவிலைப்படி 1000 ரூபாய் உயருகிறது.

அடிப்படை ஊதியம் 35,000 ரூபாய் 35000 ரூபாய் எனில், 13,300 ரூபாய் அகவிலைப்படி கிடைக்கும். அதாவது அகவிலைப்படி 1400 ரூபாய் உயருகிறது.

அடிப்படை ஊதியம் 45000 ரூபாய் என்றால் 17100 ரூபாய் அகவிலைப்படி கிடைக்கும். அதாவது அகவிலைப்படி 1800 ரூபாய் உயருகிறது.

அடிப்படை ஊதியம் 55,000 ரூபாய் எனில் 20,900 ரூபாய் அகவிலைப்படி கிடைக்கும். அதாவது அகவிலைப்படி 2200 ரூபாய் உயருகிறது.

அடிப்படை ஊதியம் 65,000 ரூபாய் எனில் 24,700 ரூபாய் அகவிலைப்படி கிடைக்கும். அதாவது அகவிலைப்படி 2600 ரூபாய் உயருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்