ஆப்நகரம்

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்.. மத்திய அரசு ஒப்புதல்.. எவ்வளவு தெரியுமா?

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை போனஸ் தொகையாக வழங்க மத்திய அரசு ஒப்புதல்.

Samayam Tamil 28 Sep 2022, 2:34 pm
நவராத்திரி, பூஜை, தீபாவளி என பண்டிகைக்காலம் நெருங்கிவிட்டது. எனவே ரயில்வே ஊழியர்கள் இந்தாண்டு போனஸ் தொகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு ஆயுத பூஜைக்கு முன்பாக போனஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
Samayam Tamil railway


இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை போனஸ் தொகையாக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால் சுமார் 11 லட்சம் அரசிதழ் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். மேலும், போனஸ் தொகை வழங்குவதற்காக இந்திய ரயில்வேக்கு கூடுதலாக 2000 கோடி ரூபாய் செலவாகும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. ஓய்வூதியதாரர்களுக்கும் ஹேப்பி நியூஸ்!
இதுமட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கும் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது. இதனால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சத்துக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

2021ஆம் ஆண்டிலும் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்