ஆப்நகரம்

பிரதமர் வீட்டு வசதி திட்டம் 2024 வரை நீட்டிப்பு.. பயனாளிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Aug 2022, 2:52 pm
பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் (Pradhan Mantri Awas Yojana - Urban) திட்டம் 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய கேபினட் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தை 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil PMAY-U


2022 மார்ச் 31ஆம் தேதிக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டிய 122.69 லட்சம் வீடுகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் முதலில் 100 லட்சம் வீடுகளை கட்டி முடிப்பதற்காக திட்டமிடப்பட்டது.

திட்டமிடப்பட்டதை விட கூடுதல் வீடுகளுக்கு டிமாண்ட் இருந்தது. ஆனால் திட்டமிட்டதை விட அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. இதுவரை சுமார் 62 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. தற்போது 102 லட்சம் வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆன்லைன் கடன் ஆப்களுக்கு ஆப்பு.. ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு!
கூடுதலாக 40 லட்சம் வீடுகளுக்கு டிமாண்ட் உள்ளதால் மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய பிரதேச அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில் பிரதமர் வீட்டு வசதி திட்டம் 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்டுவதற்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. திட்டத்தை அமல்படுத்துவது, பயனாளிகளை தேர்வு செய்வது ஆகியவை மாநில அரசுகள், ஒன்றிய பிரதேச அரசுகளின் பணியாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்