ஆப்நகரம்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. இனி இதெல்லாம் பயன்படுத்தக்கூடாது.. மத்திய அரசு உத்தரவு!

ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Samayam Tamil 28 Jun 2022, 4:43 pm
வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு (Single use plastic) ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil plastic ban


ஜூலை 1 முதல் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும், சேகரிக்கவும், விநியோகிக்கவும், விற்பனைக்கும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கீழ்காணும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • பலூன் குச்சிகள்

  • மிட்டாய் குச்சிகள்

  • சிகரெட் பாக்கெட்

  • பிளேட், கப், கிளாஸ், ஃபோர்க், ஸ்பூன், கத்தி, ட்ரே போன்ற கட்லரி பொருட்கள்

  • ஸ்ட்ரா (Straw)

  • யெர்பட்ஸ் (Earbuds)

  • ஸ்வீட் பாக்ஸ்

  • அழைப்பிதழ் அட்டைகள்

  • 100 microns கீழ் உள்ள பிவிசி பேனர்கள் (PVC Banners)

12 கிலோ தங்க நாணயம்.. 35 ஆண்டுகளுக்கு பின் தேடுதல் வேட்டையில் மத்திய அரசு!
பிளாஸ்டிக் தடையை மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியங்களும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களும் கண்காணிக்க வேண்டும். பிளாஸ்டிக் தடை நிலவரம் குறித்து அவ்வப்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்கெனவே தடை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்