ஆப்நகரம்

சிறு சேமிப்பு வட்டி உயர்வு? மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு!

சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 31 Mar 2023, 10:46 am
வரும் ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கு சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி (Small savings schemes interest rate) உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil small savings
small savings schemes interest rate


சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மத்திய அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான சிறு சேமிப்பு வட்டி விகிதம் குறித்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட இருக்கிறது.

இந்த முறை வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் என்பது அரசு பத்திரங்களின் ஏற்றத்துக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் வரை தொடர்ந்து ஒன்பது காலாண்டுகளாக சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி மாற்றப்படாமல் இருந்த நிலையில், கடந்த இரண்டு காலாண்டுகளாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் - பிப்ரவரி காலத்தில் அரசு பத்திரங்கள் ஏற்றம் அடைந்துள்ளன. இந்த காலத்தில் ஐந்தாண்டு அரசு பத்திரங்கள் 0.30 சதவீதமும், 10 ஆண்டு அரசு பத்திரங்கள் 0.20 சதவீதமும் ஏற்றம் அடைந்துள்ளன. இந்த ஏற்றத்தை வைத்தே சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி முடிவு செய்யப்படும்.

எனவே, வரும் ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கு சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள சிறு சேமிப்பு முதலீட்டாளர்கள் பயனடைவார்கள்.

எனினும், பத்திரங்கள் ஏற்றத்தால் வட்டி விகிதம் கட்டாயம் உயர்த்தப்பட வேண்டும் என பொருள் இல்லை. மத்திய அரசு விரும்பினால் மட்டுமே வட்டி விகிதம் உயர்த்தப்படும். இதற்கு கடந்த செப்டம்பர் வரை ஒன்பது காலாண்டுகளாக வட்டி மாற்றப்படாமல் இருந்ததே சான்று.

அந்த ஒன்பது காலாண்டுகளில் கொரோனா நெருக்கடி காலகட்டம் என்பதால் அரசு பத்திரங்கள் கடுமையாக சரிந்துவிட்டன. இந்த சூழலில் சிறு சேமிப்பு வட்டி விகிதத்தை அரசு குறைத்திருக்க வேண்டும். ஆனால், ஒன்பது காலாண்டுகளாக வட்டியை குறைக்காமல் ஒரே அளவில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்