ஆப்நகரம்

பழைய ஓய்வூதிய திட்டம் வருமா வராதா? முடிவை சொன்ன மத்திய அரசு!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 21 Mar 2023, 1:33 pm
பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old pension scheme) மீண்டும் அமல்படுத்த திட்டம் இருக்கிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போதைய ஓய்வூதிய திட்டம் பற்றிய விவரங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Samayam Tamil union finance ministry says no proposal under consideration to implement old pension scheme for central government employees
பழைய ஓய்வூதிய திட்டம் வருமா வராதா? முடிவை சொன்ன மத்திய அரசு!


​மக்களவையில் கேள்வி​

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த திட்டம் இருக்கிறதா என நாடாளுமன்ற மக்களவையில் சர்மிஷ்டா சேதி எம்.பி கேள்வி எழுப்பினார். இதற்கு நிதித் துறை இணை அமைச்சர் பகவத் காரத் பதில் அளித்துள்ளார்.

​தேசிய ஓய்வூதிய திட்டம்​

2003 டிசம்பர் 22 தேதி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவால் தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension System) அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு நிலையான முறையில் ஓய்வூதியம் வழங்கவும், சிறு சேமிப்புகள் வாயிலாக நல்ல முதலீடுகளை மேற்கொள்ளவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ராணுவ படையினர் தவிர அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 2004 ஜனவரி 1 முதல் தேசிய ஓய்வூதிய திட்டம் கட்டாயமாக்கப்பட்டது.

​அனைத்து மக்களுக்கும் ஓய்வூதிய திட்டம்​

2009 மே 1ஆம் தேதி முதல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. விருப்பமுள்ள குடிமக்கள் தாமாக தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து முதலீடு செய்யலாம்.

​அரசு ஊழியர்களுக்கு நிவாரணம்​

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு தொகை அவர்களின் சம்பளத்தில் 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பங்களிப்பு தாமதமானால் அல்லது செலுத்தப்படவில்லை எனில் அதற்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. வருமான வரி சலுகைகளும் கிடைக்கிறது.

​பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு வாய்ப்பில்லை​

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு இந்திய அரசின் பரிசீலனையில் எந்த திட்டமும் இல்லை என்று நிதித் துறை இணையமைச்சர் பகவத் காரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்