ஆப்நகரம்

EPFO பென்சன் உயர்த்துவதற்கு கடைசி தேதி நீட்டிப்பு.. மத்திய அரசு உத்தரவு!

EPFO பென்சன் உயர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியை ஜூன் 26ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 3 May 2023, 10:45 am
EPFO பென்சன் பயனாளிகள் தங்களது ஓய்வூதிய தொகையை உயர்த்திக்கொள்வதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதியை மேலும் நீட்டித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்றுடன் கடைசி தேதி முடிய இருந்த நிலையில் மத்திய அரசு கடைசி தேதியை நீட்டித்துள்ளது EPFO பென்சன் பயனாளிகளுக்கு நல்ல செய்தியாக வெளிவந்துள்ளது.
Samayam Tamil union government extends deadline to apply for higher epfo pension to june 26th
EPFO பென்சன் உயர்த்துவதற்கு கடைசி தேதி நீட்டிப்பு.. மத்திய அரசு உத்தரவு!


​உச்ச நீதிமன்றம் உத்தரவு​

கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தொழிலாளர் பென்சன் திட்டம் 2014 திருத்தச் சட்டத்தை உறுதி செய்தது. இதனால், பென்சன் பங்களிப்புக்கான சம்பள உச்சவரம்பு மாதம் 15000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மேலும், உச்சவரம்பையும் தாண்டி ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 8.33% தொகையை பங்களிப்பாக செலுத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.

​பென்சன் உயரும்​

பென்சன் திட்டத்தில் பங்களிப்பு தொகையை உயர்த்துவதால் பயனாளி ஓய்வுக்காலத்தில் அதிக ஓய்வூதியம் பெற முடியும். இது EPFO பென்சன் பயனாளிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் தீர்ப்பாக வெளிவந்தது.

​விண்ணப்பமும் கடைசி தேதியும்​

EPFO பென்சன் தொகையை உயர்த்திக்கொள்வதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் பின்னர் மே 3ஆம் தேதி வரை நீட்டித்தது EPFO நிறுவனம். இன்றுடன் கடைசி தேதி முடிவடைய இருந்தது.

​தொழில்நுட்ப சிக்கல்கள்​

மே 3ஆம் தேதி கடைசி தேதி முடிவடைய இருந்தாலும் EPFO இணையதளத்தில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் தொடர்ந்து நீடித்து வந்ததால் பயனாளிகள் தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியாமல் போனது. இதனால், கடைசி தேதியை மேலும் நீட்டிக்க வேண்டும் என அரசுக்கு EPFO பயனாளிகள், சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

​கடைசி தேதி நீட்டிப்பு​

இந்நிலையில், EPFO பென்சன் தொகையை உயர்த்திக்கொள்ள விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊழியர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கங்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்