ஆப்நகரம்

Cotton: ஜவுளித் துறையினருக்கு ஹேப்பி நியூஸ்.. பருத்தி இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு!

பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 5 Jul 2022, 5:49 pm
உலகிலேயே மிகப்பெரிய பருத்தி உற்பத்தியாளராக இந்தியா இருக்கிறது. ஆனால், உள்நாட்டில் பருத்தி உற்பத்தி குறைந்ததாலும், சர்வதேச சந்தையில் பருத்தி விலை உயர்ந்ததாலும் அண்மையில் இந்தியாவில் பருத்தி விலை கடகடவென உயர்ந்தது.
Samayam Tamil cotton


இதனால் ஜவுளித் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பருத்தி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஜவுளித் துறையினர் உள்பட நாடு முழுவதும் ஜவுளித் துறை பிரதிநிதிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு தற்காலிகமாக விலக்கு அளித்தது மத்திய அரசு. இதன்படி செப்டம்பர் 30ஆம் தேதி வரை இறக்குமதி வரி இல்லாமல் பருத்தி இறக்குமதி செய்ய அரசு அனுமதி வழங்கியது.

Service Charge: ஹோட்டலில் சேவைக் கட்டணம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்?
இந்நிலையில், இறக்குமதி வரி விலக்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி அக்டோபர் 31ஆம் தேதி வரை இறக்குமதி வரி இல்லாமல் பருத்தி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் பருத்தி சாகுபடி தாமதமாகியுள்ளதால் இறக்குமதி வரி விலக்கு அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பருத்தி விலை கட்டுப்பாட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, பிரேசில், எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா அதிகளவில் பருத்தி இறக்குமதி செய்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்