ஆப்நகரம்

கிசான் பணம்.. கடைசி தேதி நீட்டிப்பு.. விவசாயிகள் இதை பண்ணுங்க!

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு eKYC முடிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு.

Samayam Tamil 15 Aug 2022, 1:08 pm
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 ரூபாய் என்ற வீதம் ஆண்டுக்கு 6000 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
Samayam Tamil pm kisan


இதுவரையில் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 11 தவணை விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த மே 31ஆம் தேதி 11ஆவது தவணை 21000 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தொடர்ந்து பணம் பெறுவதற்கு eKYC முடிக்க வேண்டும்.

eKYC முடிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 31ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடைசி தேதி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இது தகுதியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது.

75 ஆண்டுகளில் இந்திய ரூபாய் சரிந்தது எவ்வளவு தெரியுமா?
ஆன்லைனில் eKYC முடிப்பது எப்படி?

  • ஆன்லைனில் eKYC முடிக்க https://pmkisan.gov.in/ இணையதளத்துக்கு செல்லவும்.

  • அதில் உள்ள Farmers Corner பிரிவில் eKYC தேர்வு செய்யவும்.

  • புதிதாக திறக்கும் பக்கத்தில் ஆஹ்டார் எண் பதிவிட்டு Search பட்டனை கிளிக் செய்யவும்.

  • இப்போது மொபைல் எண் பதிவிட்டு OTP பெறவும்.

  • OTP பதிவிட்டு Submit கொடுக்கவும்.

  • இத்துடன் உங்கள் eKYC முடிந்துவிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்