ஆப்நகரம்

18 ஜவுளி பொருட்களுக்கு வரி நிவாரணம்.. ஏற்றுமதியாளர்களுக்கு குட் நியூஸ்!

RoDTEP திட்டத்தின் கீழ் சேலை, லுங்கி உள்ளிட்ட 18 ஜவுளி பொருட்களுக்கு ஏற்றுமதி வரி நிவாரணம்

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 26 Mar 2023, 3:06 pm
RoDTEP திட்டத்தின் கீழ் ஜவுளித் துறையில் சேலை, லுங்கி உள்பட 18 பொருட்களுக்கு ஏற்றுமதி வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil textile
textile


2019ஆம் ஆண்டு வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் மத்திய அரசு ஏற்றுமதி பொருட்களுக்கான வரி நிவாரணம் திட்டத்தை (RoDTEP - Remission of Duties and Taxes on Exported Products) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

பொருட்கள் மீதான வரி ஏற்றுமதி செய்யப்படக்கூடாது என்ற கொள்கையின் கீழ் இத்திட்டத்தில் ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விலக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏற்றுமதி மீதான மத்திய, மாநில அரசு வரிகள் அனைத்தும் திருப்பிச் செலுத்தப்படுகின்றன.

இந்நிலையில், சேலை, லுங்கி உள்ளிட்ட 18 ஜவுளி பொருட்களுக்கு RoDTEP திட்டத்தின் கீழ் வரி விலக்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சேலை, லுங்கி உள்ளிட்ட 18 ஜவுளி பொருட்களுக்கு இனி ஏற்றுமதி வரி நிவாரணம் கிடைக்கும்.

2023 மார்ச் 23ஆம் தேதி முதல் ஏற்றுமதி செய்யப்பட்ட சேலை, லுங்கி, துணிகள் உள்ளிட்ட 18 ஜவுளிப் பொருட்களுக்கு RoDTEP திட்டத்தின் கீழ் ஏற்றுமதி வரி நிவாரணம் கிடைக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஜவுளி உள்ளீட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி மற்றும் கட்டணங்கள் மீண்டும் ஏற்றுமதியாளர்களிடமே செலுத்தப்பட்டுவிடும்.

இந்த ஜவுளி பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் சேலை, லுங்கி, சட்டை துணி உள்ளிட்ட ஜவுளி பொருட்களுக்கு RoDTEP திட்டத்தின் கீழ் ஏற்றுமதி சலுகைகளை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்