ஆப்நகரம்

வியாபாரிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. அந்த திட்டத்தை நீட்டித்த மத்திய அரசு!

வியாபாரிகளுக்கான திட்டத்தை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 28 Apr 2022, 3:08 pm
வியாபாரிகளுக்கு ஒரு அட்டகாசமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, நடைபாதை வியாபாரிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமர் ஸ்வநிதி திட்டம் 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil cash


கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் நடைபாதை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவுவதற்காக பிரதமர் ஸ்வநிதி (PM SVANidhi) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டு டிசம்பர் வரை பிரதமர் ஸ்வநிதி திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய கேபினட் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தை 2024 டிசம்பர் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் பயன்கள் என்ன?

மோடிக்கு பிடிஆர் பதிலடி.. பெட்ரோல் வரியை 300% உயர்த்திய மத்திய அரசு!
பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் நடைபாதை வியாபாரிகளுக்கு பிணையில்லா கடன்கள் வழங்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு காலத்தில் வியாபாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு ஆதரவு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 5000 கோடி ரூபாய்க்கு கடன் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஸ்வநிதி திட்டம் 2024 டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் 8100 கோடி ரூபாய்க்கு கடன் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 1.2 கோடி பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் வரை பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 31.9 லட்சம் கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 2931 கோடி ரூபாய்க்கு 29.6 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுவிட்டன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்