ஆப்நகரம்

கேஸ் சிலிண்டருக்கு மானியம்.. பயனாளிகளுக்கு செம குட் நியூஸ்!

கேஸ் சிலிண்டர் மானியத்தை மேலும் நீட்டிப்பதற்கு மத்திய அரசு திட்டம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 26 Dec 2022, 12:27 pm
2016ஆம் ஆண்டில் உஜ்வாலா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், ஏழை எளிய மக்களுக்கு கேஸ் சிலிண்டர் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தாண்டில், நாட்டில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 32.5 கோடியை தொட்டுள்ளதாக பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil union government planning to extend lpg cylinder subsidy for ujjwala scheme beneficiaries till fy24
கேஸ் சிலிண்டருக்கு மானியம்.. பயனாளிகளுக்கு செம குட் நியூஸ்!


​உஜ்வாலா திட்டம்

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், முதல் கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். மேலும், ஒரு இலவச கேஸ் அடுப்பும் வழங்கப்படும்.

​சிலிண்டர் மானியம்

இதற்கிடையே, ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கேஸ் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் பணவீக்கமும் அதிகரித்தது. விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர் வரை ஒவ்வொரு சிலிண்டருக்கும் 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதற்காக நடப்பு நிதியாண்டுக்கு மட்டும் 6100 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

​மானியம் நீட்டிப்பு

வரும் மார்ச் மாதத்துடன் இந்த 200 ரூபாய் சிலிண்டர் மானியம் முடிவுக்கு வர இருக்கிறது. இந்நிலையில், மேலும் அடுத்த நிதியாண்டுக்கும் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியத்தை நீட்டிக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மகிழ்ச்சி செய்தியாக வெளிவந்துள்ளது.

​பட்ஜெட்

2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கிவிட்டது. இந்நிலையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் 200 ரூபாய் சிலிண்டர் மானியத்தை மேலும் அடுத்த நிதியாண்டுக்கு நீட்டிக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

​கவரேஜ்

மேலும், இன்னும் சிலிண்டர் வசதி அதிகம் பெறப்படாத மாநிலங்களிலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கவரேஜை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய சூழலில் மேகாலயா மாநிலம் வெறும் 54.9% கவரேஜுடன் மோசமான நிலையில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் திரிபுரா (79.3%), ஜார்கண்ட் (80.2%), குஜராத் (80.6%) ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்