செல்வமகள் சேமிப்பு திட்டம், சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி போன்ற அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கு ஆதார், பான் கார்டுகள் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அஞ்சலக சேமிப்பு, சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு திட்டம், கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு சான்றிதழ் போன்ற அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களில் நல்ல வட்டி கிடைத்து வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டியும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவோர் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரையில் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார், பான் கார்டுகள் கட்டாயமில்லை என்பதே விதிமுறையாக இருந்தது.
இந்நிலையில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆதார் கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, புதிதாக சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோர் கட்டாயமாக ஆதார், பான் விவரங்களை சமர்ப்பித்தாக வேண்டும்.
பழைய சிறு சேமிப்பு கணக்குதாரர்கள் இன்னும் ஆதார், பான் விவரங்களை வழங்காமல் இருந்தால், 2023 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதார், பான் விவரங்களை சமர்ப்பித்தாக வேண்டும்.
புதிதாக சிறு சேமிப்பு திட்டங்களில் கணக்கு தொடங்குவோர் உடனடியாக ஆதார் விவரங்களை வழங்காவிட்டாலும் கணக்கு தொடங்கி ஆறு மாதங்களுக்குள் ஆதார் விவரத்தை வழங்க வேண்டும். எனினும், கணக்கு தொடங்கும்போதே பான் கார்டு விவரம் வழங்கப்பட வேண்டும்.
ஆதார், பான் கார்டு விவரங்களை வழங்காத பழைய சிறு சேமிப்பு கணக்குதாரர்களின் கணக்குகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் முடக்கப்படும். ஆதார், பான் விவரங்கள் வழங்கப்பட்ட பிறகே மீண்டும் கணக்குகள் செயல்படும்.
அஞ்சலக சேமிப்பு, சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு திட்டம், கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு சான்றிதழ் போன்ற அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களில் நல்ல வட்டி கிடைத்து வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டியும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவோர் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரையில் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார், பான் கார்டுகள் கட்டாயமில்லை என்பதே விதிமுறையாக இருந்தது.
இந்நிலையில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆதார் கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, புதிதாக சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோர் கட்டாயமாக ஆதார், பான் விவரங்களை சமர்ப்பித்தாக வேண்டும்.
பழைய சிறு சேமிப்பு கணக்குதாரர்கள் இன்னும் ஆதார், பான் விவரங்களை வழங்காமல் இருந்தால், 2023 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதார், பான் விவரங்களை சமர்ப்பித்தாக வேண்டும்.
புதிதாக சிறு சேமிப்பு திட்டங்களில் கணக்கு தொடங்குவோர் உடனடியாக ஆதார் விவரங்களை வழங்காவிட்டாலும் கணக்கு தொடங்கி ஆறு மாதங்களுக்குள் ஆதார் விவரத்தை வழங்க வேண்டும். எனினும், கணக்கு தொடங்கும்போதே பான் கார்டு விவரம் வழங்கப்பட வேண்டும்.
ஆதார், பான் கார்டு விவரங்களை வழங்காத பழைய சிறு சேமிப்பு கணக்குதாரர்களின் கணக்குகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் முடக்கப்படும். ஆதார், பான் விவரங்கள் வழங்கப்பட்ட பிறகே மீண்டும் கணக்குகள் செயல்படும்.