ஆப்நகரம்

அதானிக்கு Z பிரிவு பாதுகாப்பு.. மத்திய அரசு முடிவு!

தொழிலதிபர் கவுதம் அதானிக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 11 Aug 2022, 3:28 pm
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருப்பது மட்டுமல்லாமல் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும் இருக்கிறார்.
Samayam Tamil adani


அண்மையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் கடகடவென உயர்ந்ததால் உலகின் 4ஆவது பெரிய பணக்காரராகவும் கவுதம் அதானி முன்னேறியுள்ளார். இந்நிலையில், புலனாய்வு துறை (Intelligence Bureau) வழங்கிய ரிப்போர்ட் அடிப்படையில் அதானிக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதானிக்கு பாதுகாப்பு தேவை என புலனாய்வு துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே, மத்திய அரசால் வழங்கப்படும் உச்சபட்ச பாதுகாப்பான Z பிரிவு பாதுகாப்பை அதானிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுவிச்சர்லாந்தில் 800 கோடி கடன் வாங்கிய அதானி.. காரணம் என்ன?
இதன்படி, அதானிக்கு 30 ராணுவ வீரர்கள் அடங்கிய Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். எனினும், இந்த Z பிரிவு பாதுகாப்பிற்கான முழு செலவையும் அதானியே ஏற்றுக்கொள்வார்.

இதற்கு முன் ஏற்கெனவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானிக்கும், அவரது மனைவி நிடா அம்பானிக்கும் Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான செலவுகளை அம்பானி ஏற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்