ஆப்நகரம்

RBI: ரிசர்வ் வங்கியில் ஆனந்த் மகிந்த்ராவுக்கு முக்கிய பதவி!

ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு உறுப்பினராக ஆனந்த் மகிந்த்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 14 Jun 2022, 6:26 pm
மகிந்த்ரா குழுமத்தின் தலைவரும், தொழிலதிபருமான ஆனந்த் மகிந்த்ரா ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழுவில் இணைக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil anand mahindra


அவர் மட்டுமல்லாமல் ரவீந்திர தோலக்கியா, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், பங்கஜ் படேல் ஆகியோரும் ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழுவில் இயக்குநர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

ஆனந்த் மகிந்த்ரா உள்பட மேற்கூறிய நபர்கள் அனைவரும் நான்கு ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கி நிர்வாக குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய கேபினட் இன்று அனுமதி அளித்துள்ளது.

ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்.. மத்திய அரசு உத்தரவு!
ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு பல்வேறு முக்கிய விவகாரங்களை கவனித்து வருகிறது. நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்திய அரசால் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

ரிசர்வ் வங்கி நிர்வாக குழுவின் முக்கிய பொறுப்புகளை பொறுத்தவரை, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிர்வாகக் குழு கூடி ஆலோசிக்கும். இதில் ரெப்போ வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்