ஆப்நகரம்

எகிறும் கோதுமை விலை.. இறக்குமதி வரியை நீக்க அரசு திட்டம்!

கோதுமை மீதான இறக்குமதி வரியை நீக்குவதற்கு மத்திய அரசு பரிசீலனை.

Samayam Tamil 10 Aug 2022, 1:31 pm
இந்தியர்களின் அத்தியாவசிய உணவு தானியங்களில் கோதுமை முன்னிலையில் உள்ளது. எனினும், அண்மைக்காலமாக கோதுமை விலை உயர்ந்துகொண்டே போகிறது. இதுமட்டுமல்லாமல், பண்டிகை சீசன் நெருங்கி வருவதால் வரும் நாட்களில் டிமாண்ட் மேலும் உயரும்.
Samayam Tamil wheat


எனவே, டிமாண்டை சமாளிப்பதற்காகவும், விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காகவும், கோதுமை மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை நீக்குவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதில் உணவுத் துறை, வேளாண் துறை, வர்த்தக துறை, தொழில்துறை, நிதித்துறை, நுகர்வோர் விவகார துறை, பெட்ரோலிய துறை அமைச்சகங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

அரிசி விலை உயரப் போகிறதா? மத்திய அரசு தகவலால் அதிர்ச்சி!
இந்தக் கூட்டத்தில் கோதுமை விலையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் பற்றியும், கோதுமை மீதான இறக்குமதி வரியை நீக்குவது பற்றியும் ஆலோசனை நடைபெறவுள்ளது.

இதுமட்டுமல்லாமல், மற்றொரு பிரதான உணவு தானியமான அரிசி விலையும் உயர்ந்து வருகிறது. ஏற்றுமதி டிமாண்ட், நெல் விதைப்பு குறைவு போன்ற காரணங்களால் அரிசி விலை உயர்ந்து வருகிறது. இதுகுறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்