ஆப்நகரம்

அனைவருக்கும் சூப்பர் சலுகைகள்: மத்திய அரசின் அதிரடி உத்தரவு!

அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் இழப்பீடு மற்றும் பென்சன் சலுகைகளை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 3 Jan 2021, 1:43 pm
மத்திய அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது ஊனம் ஏற்பட நேர்ந்தால் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பணியில் இருக்கும்போது ஊனம் ஏற்பட நேர்ந்தாலும், ஊனம் ஏற்பட்ட பிறகும் பணியில் இருக்க விரும்பினாலும் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Samayam Tamil Money


இதனால், CRPF, BSF, CISF ஆகிய மத்திய படைகளின் ஊழியர்களுக்கு மிகப்பெரிய அளவில் நிவாரணம் கிடைக்கும் என மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஏனெனில், மத்திய ஆயுதமேந்திர போலீஸ் படையினர் பணியில் இருக்கும்போது ஊனம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

UPI பரிவர்த்தனைக்கு எக்ஸ்ட்ரா பணம் கட்டணுமா? அரசு சொல்வது இதுதான்!
அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றபிறகு பென்சன் வாங்கும்போதும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் வாழ்வை எளிமைப்படுத்துவதுதான் இந்த முயற்சியின் குறிக்கோள் என அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் சந்திக்கும் இன்னல்களை கருத்தில் கொண்டு, சர்வீஸ் விதிமுறைகளில் இருக்கும் முரண்பாடுகளை நீக்க மத்திய அரசின் புதிய உத்தரவூதவும். இதற்கு முன், 2004ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

சித்ராவின் ஹேண்ட் பேக்கில் கஞ்சா, சிகரெட்: திசை மாறும் விசாரணை
இதுமட்டுமல்லாமல், தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் இவர்களுக்கு பயன்கள் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் Extraordinary Pension விதிமுறை (9) கீழ் சலுகைகள் கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்